tamilnadu

img

அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் ஆக23- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பத்மாவதி நிறுவனத்தின் சார்பில் அவுட்சோர்சிங் பிரிவு ஊழியர்களாக நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். 2013ஆம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பணியில் சேர்ந்த செக்யூரிட்டி மற்றும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிகிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பி.சசிகுமார் தலைமையேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் ஜி.பழனிவேல், யு.ராமச்சந்திரன், சங்க செயலாளர் சந்திரமோகன், பொருளாளர்கள் மணிமதி, ஜெயசுதா கோரிக்கைகளை விளக்கி பேசினர். 2013-ஆம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி பணியில் சேர்ந்த செக்யூரிட்டி பணியில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.7400 மற்றும் பணியாளர்களுக்கு ரூ.6,400 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.