tamilnadu

img

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்குக! - கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 13- கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு  அறிவித்த கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.2 ஆயிரம் கிடை க்காதவர்களுக்கு உடனடியாக வழ ங்கிட வேண்டும். கட்டிட கட்டுமான தொழிற்சங்கக் சட்டம் 1996 மாநி லங்களுக்கிடையே இடம் பெயரும்  தொழிலாளர் சட்டம் 1979 ஆகிய வற்றை எந்த சட்டத் தொகுப்புட னும் இணைக்கக் கூடாது. கட்டு மான பொருட்களின் விலை உய ர்வை கட்டுப்படுத்த வேண்டும். இரு ம்பு, மணல், கருங்கல் எடுப்பதின் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு கட்டுமான தொழிலா ளர் சங்கம் சார்பில் திங்களன்று சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான சங்க மாவட்டச் செய லாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செய லாளர் ரெங்கராஜன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் மணி கண்டன் ஆகியோர் பேசினர்.
பொன்னமராவதி
அனைத்து தொழிலாளர்க ளுக்கும் நிவாரணம் வழங்க வே ண்டும் என கோரி பொன்னமராவதி அண்ணாநகர், ஏனாதி ஆகிய இரு  இடங்களில் புதுக்கோட்டை மாவட்ட கல்லுடைக்கும் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி அண்ணா நகரில்  கட்டுமான தொழிலாளர் சங்க  ஒன்றிய பொறுப்பாளர் பி.சிங்காரம்  தலைமை வகித்தார். ஏனாதியில் கிளை செயலாளர் ராஜா தலைமை  வகித்தார்.
கரூர்
கரூர் மாவட்ட கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் (சிஐடியு)  சார்பாக கரூர் வெண்ணைமலை யில் உள்ள தொழிலாளர் அலுவ லகம் முன்பு மாவட்ட நிர்வாகி வி.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.