தஞ்சாவூர், நவ30- தஞ்சை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 36 கடலோர கிராமங்களில் இருந்து ஆயி ரக்கணக்கான நாட்டுப்படகு, விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சேதுபாவாசத்திரம் பகுதியில் கொள்ளுக்காடு தொடங்கி செம்பியன் மாதேவிப்பட்டினம் வரை உள்ள 36 மீனவ கிராமங்களில் 4500 க்கும் மேற் பட்ட நாட்டுப்படகுகளும் சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் 134 விசைப்படகுகளும் உள்ளன. கனமழை பெய்து வருவதாலும், பலத்த காற்று வீசுவதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்ச ரிக்கை விடுத்ததையடுத்து மீன்வளத் துறையினர் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் மாவட்டத் தில் உள்ள 4500 நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வில்லை. படகுகள் அனைத்தும் பாது காப்பாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்க செயலா ளர் பழனிவேலு கூறுகையில், “நாட்டுப் படகுகள் மீன்பிடி தொழில் நஷ்டத்தில் தான் இயங்கி வந்தது. அதே சமயம் தற்போது பெய்துவரும் தொடர் மழை யால் மீன்பிடி சீசன் தொடங்கியுள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை தற்போதுவரை இந்த மழையால் எவ்வித பாதிப்பும் இல்லை. இருப்பி னும் மீன்வளத்துறை அனுமதிக்கா ததால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை” என்றார்.