tamilnadu

img

செங்கொடி உயர்த்திய குடும்பங்கள்

குடவாசல், ஜூலை 10-  வலங்கைமான் ஒன்றியம் தொழுவூர் கிராமத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயலாளர்.ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் 42 பேர் இணைந்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தொழுவூர் கிராமத்திலுள்ள. கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் இணைந்தனர்.  அனைவருக்கும் செந்துண்டு அணிவித்து பாராட்டிய பின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, புதிய கல்வெட்டில்  செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் என்.ராதா தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கட்சியின் புதிய உறுப்பினர்களை வரவேற்று உரையாற்றினார். ஒன்றிய, நகரச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.