tamilnadu

img

புதுகை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

புதுக்கோட்டை, செப்.20- மருத்துவக் கல்லூரி இயக்குனரின் அறிவுறு த்தலைத் தொடர்ந்து புதுக்கோ ட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ் வெள்ளிக்கிழமையன்று சரிபார்க்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வரும் 2019-20 கல்வி ஆண்டில் 150 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி இயக்குனரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இம்மாணவர்களின் புகைப்படம் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் துணை முதல்வர் டாக்டர் சுஜாதா, இடற்கூறு இயல்  பேராசிரியர் டாக்டர் கலையரசி, உயலியங்கியல் துறை பேராசிரியர் பாஸ்கர், கல்லூரியின் நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். நீட் நுழைவுத் தேர்வின் போது பெறப்பட்ட ஹால்டிக்கெட், மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு செய்த ஆணையின் நகல், அவர்களின் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை புகைப்படத்துடன் சரிபார்க்கப்பட்டன.