tamilnadu

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க கோரி பிரச்சாரம்

முசிறி, ஜூன் 2-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாத்திடும் வகையில் விழிப்புணவர்வு சைக்கிள் பிரச்சாரம் முசிறியில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மே 25 முதல் 31 வரை சென்னை, கடலூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய நான்கு முனைகளிலிருந்து அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டது. இந்த பிரச்சார குழு முசிறிக்கு வந்தது. அவர்களை முசிறி, தண்டலைப்புத்தூர் பகுதியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.பின்னர் கைகாட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு பள்ளிகளை தனியார் வசம் கொடுக்க கூடாது. 890 அரசு பள்ளிகளை மூடும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார குழுவில் பேசினர். நிகழ்ச்சிக்கு மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி, நிர்வாகிகள் காவ்யா, தினேஸ், அஹமது, இளவரசன், வினிதா உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய நிர்வாகிகள் ராமச்சந்திரன், சுப்பிரமணி, முருகேசன் உட்பட பலர் பிரச்சார குழுவை வரவேற்று மீண்டும் வழியனுப்பி வைத்தனர்.