tamilnadu

img

அரியலூர் மற்றும் மயிலாடுதுறை முக்கிய செய்திகள்

விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு; வி.ச. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு 

அரியலூர், ஜூலை 24- அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர் ஊராட்சி பகுதியில்  உள்ள குமிளத்தெரு செல்லும் பாதை வழியாக விவசாயிகள் நிலங்களுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்றக்கோரியும், பாதையை அடைத்து விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி யும் கடந்த  ஆண்டு  தா.பழூர் ஒன்றிய ஆணையர், மாவட்ட ஆட்சி யரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போர்க்கால அடிப்படையில் இடுபொருட்கள் மற்றும் மரக்கன்றுகளை ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு தருவதை தடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். விவ சாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படி யான விலை கொடுக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால்  விவசாய பொதுமக்கள் வேலையின்றி தவிப்பதால் விவசா யக் கடன்கள் மற்றும் குழு கடன்களை தள்ளுபடி செய்ய வே ண்டும். கொரோனா தொற்று பரவாமலிருக்க சுகாதாரத் துறை  மூலம் வீடு வீடாக பரிசோதனை நடத்த வேண்டும். கோவிந்தபுத்தூர் ஊராட்சி பொதுமக்களுக்கு பாதுகா க்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். இந்த  ஊராட்சி மக்களுக்கு நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை  உடனே வழங்க வேண்டும். ஐயனேரியிலிருந்து கிடங்கு வழி யாக விவசாய நிலங்களுக்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும். தனியார் பால் வியா பாரிகள் கொள்ளை லாபம் அடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மாட்டுவண்டிகள் மணல் அள்ளுவதற்கு தனி  குவாரி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலை வர் ப.தங்கையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வி.ச.மாவட்டச் செயலாளர் கே.மகாரா ஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், வி.தொ.ச  மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் ஆகியோருடன் வரு வாய்த் துறை ஆய்வாளர், அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்பட்டது.

ஏவிசி கல்லூரியில் மாணவர் சேர்க்கை: ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை, ஜுலை 24- கொரோனா பெரும் தொற்று காரணமாக அரசு அறிவுறுத்தலின் படி 2020-2021 கல்வியாண்டின் அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாடப் பிரிவுக ளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஏவிசி கல்லூரி தன்னாட்சி இணையதளத்தில் (www.avccollege.net) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வசதியை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தி கல்லூரியில் சேர்வ தற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் கவனமாக  பூர்த்தி செய்துவிட்டு அதற்கான விண்ணப்ப கட்ட ணத்தை ஆன்-லைன் மூலம் செலுத்திவிடலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதனுடன் பிளஸ்-1,  பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ்  ஆகியவற்றின் நகலையும் மேலும் மாற்றுதிறனாளி கள், முன்னாள் இராணுவத்தினர் வாரிசு, விளையாட்டு  வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளின் கீழ் விண்ணப்பி ப்பவர்கள் என்றால் அதற்கான சான்றிதழ்களையும் முறையாக இணைத்து, முதல்வர், ஏவிசி கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல் அஞ்சல், மயிலாடுதுறை தாலுகா என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது கொரியர் மூலமோ அனுப்ப வேண்டும் என  கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாகராஜன் தெரிவித்து ள்ளார்.

விபத்தில் ஒப்பந்த ஊழியர் பலி: மின் ஊழியர்கள், சிபிஎம் அஞ்சலி

அரியலூர், ஜூலை 24- மின்வாரியத்தின் அரியலூர் கோட்டம் த.பழூர் பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர் கே.கொளஞ்சிநாதன் மின் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரி ழந்தார். அவரது உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு மின்வாரியத்திலிருந்து ரூ.5,00,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதி கடிதத்தை அவரது குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது. ரூ.10,000 நிதி வழங்கப்பட்டது. பின்னர் கொளஞ்சிநாதனின் சொந்த ஊரான அணுகும் கிராமத்தில் அவரது இல்ல த்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மின் ஊழியர்கள் சங்க மத்திய அமை ப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.அகஸ்டி யன், வட்டச் செயலாளர் எம்.பன்னீர்செல்வம்,  கோட்டச் செயலாளர் டி.நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன், சிபிஎம் தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொளஞ்சிநாதன் உடலுக்கு மாலை அறிவித்து அஞ்சலி செலுத்தினர்.

வியாபாரிகள் மனு

சீர்காழி, ஜூலை 24- மயிலாடுதுறை தனி மாவ ட்டமாக அறிவிக்கப்பட்டு மாவட்ட த்திற்கான சிறப்பு அதிகாரி லலிதா பணியாற்றி வருகிறார். இவரை மயிலாடுதுறை அலுவலகத்தில் கொள்ளிடம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலை மையில், சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு  அளித்தனர். அதில் கொள்ளி டத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவிற்கான அறிவிப்பை உடனடியாக வெளி யிடவும், உரிய அதிகாரிகளை நிய மித்து விரைவில் பணியை துவங்க  நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 24- கொரோனா மருத்துவமனை களில் கொரோனா பரிசோதனை  மையங்களை அமைக்க வே ண்டும். சுகாதாரப் பணியா ளர்களை கொண்டு வீடுதோறும்  ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்திந்திய ஜனநாய கம் மாதர் சங்கம் சார்பில் துவா க்குடி தாலுகா மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர்  மாரியம்மாள் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் மல்லிகா கண்டன உரையாற்றினார். 

இலவச குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி ஆக.4 தஞ்சையின் அனைத்து ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம்

சிபிஎம் தஞ்சை மாவட்டக்குழு அறிவிப்பு

தஞ்சாவூர், ஜூலை 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழனன்று தஞ்சை கணபதி நகர்  கட்சி அலுவலகத்தில், மாவட்ட செய ற்குழு உறுப்பினர் வெ.ஜீவக்குமார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் பேசினார். செய ற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோக ரன், கே.பக்கிரிசாமி, சின்னை.பாண்டி யன், சி.ஜெயபால், எம்.மாலதி, பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், எஸ்.தமிழ்ச்செல்வி, கே.அருளரசன் உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:  கொரோனா நோய்த் தொற்றிலி ருந்து மக்களை பாதுகாத்திட வேண்டும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை முதல் வாரம் வரையில் நோய்த்தொற்று ஓர ளவு கட்டுப்பாட்டில் இருந்து வந்தது தற்போது கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தில் நோய்த்தொற்று கூடு தலாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வா கம் நோய்த் தொற்றில் தடுப்பு நடவ டிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டு கிறோம். கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் கொரோனா சிகிச்சை மை யத்தை உடனடியாக துவங்கிட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள  ஆரம்ப சுகாதார மையங்களில் 24 மணி  நேரமும் மருத்துவர்கள், மருத்துவ பணி யாளர்கள் தங்கி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்திட வேண்டும். தமிழக அரசு கிராமங்களில், நக ரங்களில் உள்ள ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதி யவர்களுக்கு மதியம் சத்துணவு வழ ங்கிட வேண்டும்.

கிராமப்புற ஏழை விவ சாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ஓரளவு நம்பிக்கை ஆதாரமாக விள ங்கக்கூடிய நூறு நாள் வேலை திட்ட த்தை முழுமையாக அமல்படுத்திட வேண்டும். வேலை கேட்கும் அனை வருக்கும் வேலையையும் அரசாங்க ஆணைப்படி தினக்கூலியாக ரூ.256 கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். ரேசன் கடைகளில் மத்திய, மாநில அரசு அறிவித்துள்ள நிவாரண பொருட்கள் (அரிசி, பருப்பு, சர்க்கரை,  எண்ணெய்) பயனாளிகள் அனைவ ருக்கும் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.  மத்திய அரசின் ஜல சக்தி திட்ட த்தின் பேரில் கிராம ஊராட்சிகளில் தற்போது உள்ள குடிநீர் விநியோக முறையை மாற்றி, கட்டணம் செலுத்தி குடிநீர் பெறும் நிலையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தி லும், ஒரு பகுதி ஊராட்சிகளில் இத்தி ட்டத்தை செயல்படுத்த முனைந்திருக்கி றார்கள். இதன் மூலம் குடிநீர் இணைப்பு க்கு ரூ.3000 செலுத்துவது, முதல் தவ ணையாக ரூ.1000 செலுத்த நிர்பந்திக்கி றார்கள். குடிநீர் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதும், பயன்பாட்டுக்கு ஏற்ப  கட்டணம் செலுத்தும் விதமான நிலை ஏற்படுகிறது.   இதன் மூலம் கிராமங்களில், நகரங்களில் உள்ள இலவச குடிநீர் விநி யோகம் முற்றாக ரத்தாகும் நிலை ஏற்ப டும். இதனை கண்டித்து ஆகஸ்ட் 4 அன்று  அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கிராம மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்து வது” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.