திருச்சிராப்பள்ளி, ஆக,2- முதலாளிகளுக்கு சாதகமாக 44 தொ ழிலாளர் சட்டங்களை 4 ஆக திருத்தும் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும். சேலம் உருக்காலை, பாது காப்பு தொழிற்சாலைகள், ரயில்வே துறைகளை தனியார்மயப்படுத்துவதை கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறு வனத்தை சீர் குலைப்பதை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தி ருத்தத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் சிவபெருமாள் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சுரேஷ், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் ஜான்சன், ஓஎப்டி, எச்ஏபிபி கூட்டு நடவடிக்கைக்குழு சரவணன், ரவீந்திரன் ஆகியோர் பேசினர். சிஐ டியு மாவட்டத் தலைவர் ராமர், பொரு ளாளர் வி.கே.ராஜேந்திரன், புறநகர் மாவட்டப் பொருளாளர் சம்பத், தரை க்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர் மணி கண்டன், மாவட்டத் தலைவர் சந்திரன், போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவ ட்டச் செயலாளர் வீரமுத்து, டிஆர்இயு மகேந்திரன், கரிகாலன், கண்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க சுந்தர்ராஜ், தேவராஜ் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.