tamilnadu

img

பழனியில் நிலப் பிரச்சனை காரணமாக துப்பாக்கி சூடு - 2 பேர் படுகாயம்

பழனியில் நிலப்பிரச்சனை காரணமான தியேட்டர் உரிமையாளர் நடராஜன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அப்பர் தெருவில் வள்ளுவர் திரையரங்கம் அமைந்துள்ளது.  இத்திரையரங்கின் உரிமையாளர் நடராஜனுக்கு பழனிச்சாமி, சுப்பிரமணி என்ற இருவருடன் இடப்பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இன்று இவர்களுக்குள் இடப்பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் பழனிச்சாமி, சுப்பிரமணி இருவரையும் சுட்டார்.  இதில் வயிற்றில் குண்டுபாய்ந்த நிலையில் பழனிச்சாமியும், பின்தொடையில் குண்டு பாய்ந்து சுப்பிரமணியும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் தற்போது  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நடராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி நேரில் ஆய்வு நடத்தி  வருகிறார்.