தருமபுரி, செப். 19- அருந்ததிய மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மீட்கக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் நிர்வாகிகள் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் ஒன்றி யத்திற்குட்பட்டது ராமாபுரம்.
இக்கிராமத்தைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் சுமார் 50 குடும்பத்தினர் ஓடை புறம் போக்கு நிலத்தில் பாதை அமைத்து பயன்படுத்தி வந்தனர். இப்பாதையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே அருந்ததிய மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மீட்கக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலாளர் டி.மாதையன், ஒன்றிய செய லாளர் தீ.மாரியப்பன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களு டன் திரண்டு வந்து மனு அளித்தனர்.