தருமபுரி, செப். 19- கிராம ஊராட்சிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்ற தேவையான நிதி உதவி யினை வழங்க வேண்டும் என தரும புரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழியிடம் தருமபுரி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்ட மைப்பினர் மனு அளித்தனர்
. இம்மனுவில் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆய்வுக்கூட்டத்தை தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தற்போது எந்த தகவலும் கடிதம் மூலம் வருவதில்லை.
இனி வரும் காலங்களில் தகவல்களை தபால் மூலம் தெரிவிக்க வேண் டும். 14 மற்றும் 15வது நிதிக்குழு மூலம் ஊராட்சிக்கு வரப்பெற்ற நிதியை ஊராட்சிமன்ற தீர்மா னத்தின்படி பணி ஆணை வழங்கி ஊராட்சி மூலம் டெண்டர் வழங்க அனுமதிக்க வேண்டும்.
கிராம ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வச திகளை செய்து கொடுக்க தேவை யான நிதி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை கள் சம்மந்தமாக செய்யப்பட்ட செல வினத்தை ஈடுகட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.