தருமபுரி, டிச. 22- தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் அரசியல் கட்சியின ருடன் சனியன்று ஆலோசனை நடத்தி னார். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைது துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் பார்வையாளா் டி.பி.ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான எஸ்.மலா்விழி முன்னிலை வகித்தார். இதில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதி கள், பிரச்சார விதிமுறைகள் மற்றும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள வாக்குப் பதிவின் போது மேற்கொள்ளப்படும் பணி கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், திமுக மாநில நிர்வாகி விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் ஒன்றியச் செயலா ளர் என்.கந்தசாமி, அதிமுக இலக்கிய அணி செயலா் தகடூா் விஜயன், காங்கிரஸ் நகரத் தலைவா் செந்தில்குமார் உள்ளிட்ட அரசி யல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.