tamilnadu

அரசு திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் அரூர் சிறந்த ஊராட்சி ஒன்றியமாக தேர்வு

தருமபுரி, ஆக.14-  தருமபுரி மாவட்டத்தில் அரசு திட்டப் பணிகளை சிறந்த  முறையில் செயல்படுத்தியதற்காக அரூர் ஊராட்சி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  2019- ஆம் ஆண்டில் அரசு திட்டப் பணிகள்,  மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத் திட்ட பணிகளையும் அரூர் ஊராட்சியில் சிறந்த முறையில் செயல்படுத்தி இருப்பதால், இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு அலுவ லர்கள் சுதந்திர தினத்தில் விருது பெறுவதற்காக தேர்வு செய் யப்பட்டுள்ளனர். இதையடுத்து,  அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.ஆறுமுகம், பெ.செந்தில்குமார், உதவிப் பொறியாளர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.கே.சண்முகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி. கோபிநாத், கே.மணி,  இளையராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.காளிதாசன், டி. செல்லன், பி.சக்திவேல், எஸ்.அபுல்கலாம் அசாத், பணி மேற்பார்வையாளர்கள் எ.அன்புராஜ், என்.புனிதா, ஆர். அன்பழகன், சாலை ஆய்வாளர்கள் எஸ்.முருகன், பி.வடி வேல், எஸ்.இளவரசன் ஆகியோருக்கு தருமபுரியில் இன்று  (வியாழக்கிழமை) நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார்.