tamilnadu

img

ஜெயலலிதாவின் சொத்துக்கள் கணக்கெடுப்பு

சென்னை, நவ.4- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்கள் இருப்பின் அதுகுறித்த விவ ரங்களை சேகரித்து அனுப்பி வைக்கும்படி மாவட்ட ஆட்சிய ரிடமிருந்து வட்டாட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகி யோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்க ப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார சாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

ஜெயலலிதா உள்பட 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 5.12.2016 அன்று ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த வழக்கில் 14.2.2017 அன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதி மன்றம் உறுதி செய்தது. தீர்ப்பு வழங்கப்பட்ட போது ஜெயல லிதா உயிருடன் இல்லை என்பதால் அவர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது. அதில் ஜெயலலி தாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை யாரிடம் வசூலிப்பது என்று கேட்கப்பட்டு இருந்தது. இந்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் 28.9.2018-ல் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் ஜெயலலி தாவின் சொத்துக்கள் என்னவாகும் என்கிற சூழ்நிலை இருந்தது. தற்போது அவரது சொத்துக்கள் அனைத்தையும் கணக்கெடுக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகங்களுக்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணி ப்புத்துறை இயக்குநர் அலுவல கத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த அறிக்கையை விரைவாக அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவ ரங்களை சேகரித்து அனுப்பி வைக்கும்படி மாவட்ட ஆட்சி யர்களிடமிருந்து வட்டாட்சியர்க ளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு ள்ளது.