மாநிலங்களவையில் கே.கே.ராகேஷ் சங்கநாதம்
புதுதில்லி, பிப்.8- மதச்சார்பற்ற அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பதற்காக நடைபெறும் போராட்டத்தை உங்களால் தோற்கடிக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் கே.கே. ராகேஷ் கூறினார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று புதனன்று கே.கே. ராகேஷ் பேசியதாவது: குடியரசுத் தலைவர் உரையில் பல இடங்க ளில் வெற்று ஆரவாரத்துடனும், பல இடங்களில் உண்மையான விவரங்களை மிகவும் திரித்தும் கூறப்பட்டிருக்கின்றன. இது, நாட்டு மக்களின் உண்மையான அபிலாசைகளையோ அல்லது பிரச்சனைகளையோ பிரதிபலிக்கவில்லை. ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித் தெல்லாம் கூட பேசியிருக்கிறீர்கள். உறுதிமொழி களை அளிப்பதில் மிகவும் சிறந்து விளங்கு கிறீர்கள். ஆனால் உண்மை நிலை என்ன?
வாக்குறுதிகள் பற்றி வாய்திறக்கவில்லை
அனைத்து அடிப்படைத் துறைகளும் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியி ருக்கின்ற நிலையிலும்கூட நீங்கள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்து தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள். குடியரசுத் தலைவர் உரையில், நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கக் கூடிய பொருளாதார நெருக்கடி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. நம் நாட்டின் பொருளா தாரத்தை நாசத்திற்குள்ளாக்கிய பணமதிப் பிழப்பு நடவடிக்கை குறித்தும் எதுவும் குறிப்பி டப்படவில்லை. குறைந்தபட்சம் கறுப்புப்பணம் வெளிக்கொணர்ந்த அளவு குறித்தாவது ஏதாவது நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். 34 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இருப்பதாகவும், அதனை வெளிக்கொணர்வோம் என்றும் நீங்கள் உறுதி அளித்திருந்தீர்கள். அதைப் பற்றி எதுவும் இதில் இல்லை. ஜிஎஸ்டி என்ன ஆயிற்று? இது மாநிலங்க ளின் அதிகாரங்களைப் பறித்திருக்கிறது. மாநில சிஎஸ்டி தொகைகளை மாநிலங்களுக்கு அளிக்காததன் காரணமாக மாநிலங்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன.
விவசாயிகள் தற்கொலைதான் இரட்டிப்பாகியுள்ளது
வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்திருந் தீர்கள். ஆனால் இப்போது உள்ள நிலைமை என்ன? நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு விகிதம் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. விவசாய நெருக்கடி மேலும் ஆழமாகிக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வருமா னத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறினீர்கள். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. மாறாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான் இரட்டிப்பாகியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியா ருக்குத் தாரைவார்ப்பது அதிகரித்துக் கொண்டி ருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கி றோம். இப்போது எல்ஐசி-யையும் விற்பதற்கு முன்வந்திருக்கிறீர்கள். நாட்டிலுள்ள முக்கியத் துறைகள் அனைத்தையுமே கார்ப்பரேட்டுகளி டம் விற்பதற்காக ஏலம் விடும் மற்றும் விற்பனை செய்யும் அமைச்சகம் ஒன்றைத் தனியே அமைப்பதுகூட சிறப்பாக இருக்கும். ஏன், இவ்வாறெல்லாம் செய்துகொண்டிருக்கி றீர்கள்? எல்லாவற்றையும் விற்றுக்கொண்டி ருக்கிறீர்கள். சுரங்க நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், ரயில்வே என அனைத்தை யும் விற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.
காந்தியை தவறாகப் பயன்படுத்துவதா?
ஊழலும், கூட்டுக்களவாணி முதலாளித்து வத்தின் மூலமாக நிறுவனமயப் படுத்தப்பட்டி ருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணை எட்டிக் கொண்டிருக்கின் றன. கல்வியும் வணிகமயமாகிக் கொண்டிருக்கி றது. பல்கலைக்கழகங்களில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறீர்கள். இவற்றால் மாணவர் கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறு வனங்களில் தொழிலாளர்கள் பெரிய அள வில் குறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவை எதுவுமே குடியரசுத்தலைவர் உரையில் இல்லை.
ஆனால், அதே சமயத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்திட வேண்டும் என்கிற உங்கள் ஆர்வத்தின் காரண மாக மகாத்மா காந்தியையும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்துவதற்கு, மகாத்மா காந்தியை எப்படி நீங்கள் தவறான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்? இது மிகவும் கேலிக்கூத்தானதும், பரிதாபகர மானதுமாகும். நாம், ஒரு மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தைப் பெற்றிருக்கிறோம். அதனை நீங்கள் கையில் எடுத்து மறுபடியும் படித்துப் பாருங்கள். நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கருத்துக்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
குடியுரிமைக்கு மதம் அளவுகோலா?
“இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஓர் இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார் பற்ற, ஜனநாயகக் குடியரசாக அமைத்திட உறுதிபூண்டிருக்கிறோம்,” என்று கூறுகிறது. நம் அரசமைப்புச்சட்டத்தின் ஆணி வேர், மதச்சார் பின்மையாகும். அத்தகைய மதச்சார்பின்மை இப்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கிறது. குடியுரிமைக்கு மதத்தை ஓர் அளவு கோலாகக் கொண்டீர்களானால், நீங்கள் மதச் சார்பற்றக் குடியரசாகத் தொடர முடியாது. அது ஒரு மத அடிப்படையிலான அரசாகத்தான் கருதப்பட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் உங்கள் பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரத்தைக் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறீர்கள். அத னால்தான் நீங்கள் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
இதற்கெதிராக நாடு முழுவதும் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் தேச விரோதிகள் என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம், நீங்களோ அதனை நாசப்படுத்துவதற்கு முயற்சித்துக் கொண்டி ருக்கிறீர்கள். கூறுங்கள், உண்மையில் யார் தேச விரோதி? அரசமைப்புச் சட்டத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்தான் தேச விரோதிகள். மாறாக, அதனைப் பாதுகாப்பதற்காகப் போரா டிக்கொண்டிருக்கிற மக்கள் தேசவிரோதிகள் அல்ல.
செல்லுலர் சிறையாக நாஜிவதை முகாமாக
காஷ்மீர் பிரச்சனை சம்பந்தமாக, அனைத்தும் நன்றாகவே இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் ஏன் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்? கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் சிறைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். மொபைல் போன்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீர் முழுமையாக செல்லுலர் சிறையாக மாறியிருக்கிறது. அது முழுமையாக நாஜி வதை முகாமாக மாறிக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது, காஷ்மீரில்? முத்தலாக். முஸ்லிம் பெண்களைப் பாது காப்பதற்காகக் கொண்டு வந்ததாகக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். இதன்மூலம் ஏன் முஸ்லிம்களைத் தண்டித்துக் கொண்டிருக்கி றீர்கள்? எவரேனும் சட்டவிரோதமாகத் தன் மனைவியைக் கைவிட்டுவிட்டால், அவரை நீங்கள் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்பினால், அவ்வாறு முஸ்லிம்களை மட்டும் ஏன் சிறைக்கு அனுப்புகிறீர்கள்? மற்ற வர்களையும் அனுப்புங்கள். மனைவியைக் கைவிட்டவர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தால், முதலில் அனுப்பப்படுபவர் யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சொல் லுங்கள்.
மதச்சார்பற்ற இந்தியாவுக்கும் பாசிஸ்ட் இந்துராஷ்டிரத்துக்கும் இடையிலான போராட்டம்
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்து கொண்டி ருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக ஆட்சியி லுள்ளவர்கள் அவற்றைக் கண்டுகொள்ளாது கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்கள். இது மதச்சார்பற்ற இந்தியாவுக்கும், பாசிஸ்ட் இந்து ராஷ்டிரத்திற்கும் இடையேயான போராட்டம். இந்தியாவின் பாரம்பரியப் பண்பையும், நம் அரசமைப்புச் சட்டம் எப்படி உருவானது என்ப தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்கு முன் எண்ணற்ற போராட்டங் கள் நடைபெற்றன. அவற்றின் அடிப்படை மதச்சார்பின்மையாகும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிரான போராட்டத் தில் லட்சோபலட்சம் மக்கள் இறந்துள் ளார்கள். இவர்களில் இந்துக்களும் உண்டு, முஸ்லிம்களும் உண்டு. பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இறந்திருக்கிறார்கள். அந்த போராட்டத்தில் பங்கேற்று, கொல்லப் பட்டதாக ஆர்எஸ்எஸ் பேர்வழியில் ஒருவர் பெயரையாவது உங்களால் சொல்ல முடியுமா? (குறுக்கீடு) நாட்டின் பல பகுதிகளில் கய்யூரில், கரிவெள்ளூரில், கவும்பாயில், தெலுங்கானா வில் எண்ணற்றோர் கொல்லப்பட்டார்கள். இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பல கம்யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்டார்கள். இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எங்களைக் கொல்ல முடியும். நீங்கள் எங்களைச் சுட முடியும். எங்களைக் கொல்வ தற்கு நீங்கள் உங்கள் குண்டர்களை அனுப்ப முடியும். ஆனாலும், நினைவில் கொள்ளுங் கள், உங்களால் எங்களைத் தோற்கடிக்க முடி யாது. உங்களால் மதச்சார்பற்ற இந்தியாவைத் தோற்கடிக்க முடியாது. நம் நாட்டின் மதச்சார் பற்ற மாண்பினைத் தோற்கடிக்க முடியாது. மக்களின் விருப்பத்தினை உங்களால் தோற் கடிக்க முடியாது. இவ்வாறு கே.கே.ராகேஷ் கூறினார்.