tamilnadu

img

காவிரியில் 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்

காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு


புதுதில்லி,ஆக.8- காவிரி நீர் பங்கீடு தொடர்பான, காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம், அக்குழு வின் தலைவர் நவீன் குமார் தலைமையில் தில்லி யில் வியாழனன்ற நடைபெற்றது. இதில் தமிழக  அரசு சார்பில், திருச்சி மண்டல பொதுப்பணித்து றை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி  தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் ராம்குமார், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அதே போல் கர்நாடகா, கேர ளா, புதுச்சேரி ஆகிய மாநிலப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் அந்தந்த மாநில பிரதி நிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்கள் மற்றும் கோரி க்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரியில்  தற்போது திறக்கும் தண்ணீரை 4 நாட்களுக்கு  திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி  ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம்  13 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது.