அரசாணைகளால் மட்டும் எந்த பணிகளும் செய்துவிட முடியாது. அந்த ஆணைகளை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். சென்னைக்கு அருகே உள்ள ஒரு ஏரியை நானே நேரில் சென்று பார்த்தேன். அங்கு தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. ஆக்கிரமிப்புகளும் அகற்றவில்லை.
“பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழு வதும் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டாம்” என்கிறார் முதல்வர் பழனிசாமி.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை உட்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் 828 மில்லி மீட்டர் மழை பெய்தது. இந்த வருடம் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டால் அடுத்த ஆண்டே குடிதண்ணீருக்கு அலைகிறோம்?
ஏரிகளை விழுங்கிய முதலைகள்
சென்னைக்கு நீர் ஆதாரமானவை நுங்கம்பாக்கம் ஏரி, (தற்போதைய வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்), தேனாம் பேட்டை ஏரி, வியா சர்பாடி ஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக் கரணை ஏரி, போரூர் ஏரி, ஆவடி ஏரி, கொளத்தூர் ஏரி, இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, பீனிக்ஸ் மால்), பெரும் பாக்கம் ஏரி. பெருங்களத்தூர் ஏரி (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்), கல்லுக்குட்டை ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடியநல்லூர் ஏரி, வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூர் ஏரி, திரு நின்றகூர் ஏரி, பாக்கம் ஏரி, விச்சூர் ஏரி, முடிச்சூர் ஏரி, சேத்துப் பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு), செம்பாக்கம் ஏரி. சிட்லபாக்கம் ஏரி , போரூர் ஏரி, மாம்பலம் ஏரி, கோடம் பாக்கம் டேங்க் ஏரி, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம், ஆலப்பாக்கம் ஏரி, வேப்பேரி, விருகம் பாக்கம் ஏரி (தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்க ளுக்கான குடியிருப்பு), கோயம்பேடு சுழல் ஏரி, (கோயம் பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்) அல்லிக்குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்) என இப்பட்டியல் இன்னும் நீளூம்.
இவை அனைத்தும் பழைய சென்னையில் இருந்த ஏரிகளாகும். அதாவது, 1906-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013 கணக் கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன. இதில் சென்னை மாநகரத்தில் எதுவுமே இல்லை. இப்போது 96 சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளைக் காணவில்லை. இதை கண்டுபிடித்து மீட்டெடுக்க வேண்டியது முதல மைச்சர் மற்றும் அமைச்சர்களின் கடமையாகும். அந்தக் கடமையை செய்தாலே குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்க ளும் நிபுணர்களும். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. நீதிபதிகள் எஸ். மணிக் குமார், சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது ‘அரசு ஆணைகள் பிறப்பித்து நிதி ஒதுக்கினால் மட்டும் போதுமா? நீர்நிலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தீர்களா? அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு நிறை வேற்றப்பட்டதா? தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண இதுவரை மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கைகள் என்ன? மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஆனால் எந்தப் பணியையும் செய்யவில்லை, அப்படி என்றால் எந்த துறை என்ன வேலை செய்கிறது என்பது தெரிய வில்லை என்றும் அரசுக்கு குட்டு வைத்தனர். அதோடு நின்றுவிடவில்லை. அரசாணைகளால் மட்டும் எந்த பணி களும் செய்துவிட முடியாது. அந்த ஆணைகளை அதிகாரி கள் அமல்படுத்த வேண்டும். சென்னைக்கு அருகே உள்ள ஒரு ஏரியை நானே நேரில் சென்று பார்த்தேன். அங்கு தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. ஆக்கிரமிப்புக ளும் அகற்றவில்லை என்று கூறி மக்கள் படும் துயரத்துக்கு சாட்சியாக நின்றார். நீர் மேலாண்மையை இந்த அரசு முறையாக கடைப் பிடிப்பதும் கிடையாது. இதற்கும் ஏராளமான உதார ணங்கள் உள்ளன. 24 மாநிலங்களில் நீர் மேலாண்மையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 2020 ஆம் ஆண்டுக்குள் சென்னை, தில்லி, ஐதராபாத், பெங்களூரு உள்பட 21 பெருநகரங்களில் நிலத்தடி நீர் முழுமையாக தீர்ந்து விடும் என்ற அதிர்ச்சித் தகவலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.
உட்புகுந்த கடல் நீர்...
நிதி ஆயோக் அறிக்கையில் கூறி இருப்பது போன்ற ஒரு நிலைமை சென்னைக்கு எப்போதும் ஏற்படாது என்று சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜ் அன்றைக்கு கூறினார். சென்னை கடல் சார்ந்த இடம் என்பதால் நிலத்தடி நீர் எப்போதும் பூஜ்ஜியத்திற்கு செல்லாது. இங்கே நிலத்தடி நீர் குறைந்தவுடன் கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். பல இடங்க ளில் கடல் நீர் உள்ளே புகுந்து விட்டது. ஆனால் கோவை, நாமக்கல் போன்ற பிற பகுதிகளில் நிலத்தடி நீர் முழுமை யாக வற்றி விடுவதற்கு வாய்ப்பு உண்டு என்றார் அவர். ஆனால், தற்போது, சென்னையில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பஞ்சத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது. வீட்டின் உரிமையாளர்கள் 300 முதல் 500 அடிவரை போர்வெல் அமைத்தும் பல இடங்களில் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.
சென்னை போன்ற நகரங்களில் நிலத்தடியில் கடல் நீர் உள்ளே புகுந்ததால் மிகப்பெரிய சூழலியல் சீர்கேடு களுக்கு வழி வகுத்து விட்டது. இது கடந்த 25 ஆண்டுக ளாக இருந்து வரும் அச்சுறுத்தல். சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் 1076 கிலோ மீட்டர் கடல் பகுதி முழுக்க இருக்கி றது. ஏற்கனவே நாகப்பட்டினத்தில் கடல் நீர் உள்ளே வந்து விட்டது. சென்னையில் மரக்காணம் வரையிலும் கடல் நீர் உள்ளே வந்து விட்டது. இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனாலும், இதிலிருந்து தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
சுரண்டுவதற்கே திட்டங்கள்!
நிலத்தடி நீர் பிரச்சனையில் இருந்து சென்னை மக்கள் தப்பிக்க என்னதான் வழி? ஆக்கிரமிப்பில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் மழை நீரை முழுமையாக சேமிக்க முடியும். சென்னையில் பொழி யும் ஒவ்வொரு மழைத்துளியும் எங்கே செல்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் நிலத்தடி நீர் வளத்திற்கான ஒரே தீர்வு. அரசாங்கத்தால் எவ்வளவு பெரிய திட்டங்கள் வேண்டுமானாலும் நினைத்த வுடன் முடித்துவிட முடியும். ஆனால், ஒரு ஏரியை அரசால் உருவாக்க முடியுமா? ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? முடியவே முடியாது. இவை இயற்கை நமக்கு அளித்தி ருக்கும் செல்வங்கள். அவற்றை இழந்ததற்கான விலையை இப்போது சென்னை நகரம் அனுபவித்து வருகிறது. என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இது முழுக்க முழுக்க உண்மையாகும்?.
சென்னையில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த தட்டுப்பாடு இயற்கையானது அல்ல. மனிதர்களால், ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா கும். ஒவ்வொரு பருவத்தின்போதும் பெய்யும் மழை நீரை முறையாக சேமித்து வைப்பதற்கான நீர் மேலாண்மை அறவே கிடையாது. இதை செய்யத் தவறிய ஆட்சியா ளர்கள், கடல்நீரை குடிநீராக்கும் 450 எம்எல்டி திறன் கொண்ட இரண்டு திட்டங்களை கொண்டு வந்தனர். இவை அனைத்தும் 60 முதல் 70 விழுக்காடு உற்பத்தி திறன் கொண்ட வையாகும். ஒவ்வொரு நாளும் கடல்நீரை குடிநீராக சுத்தி கரித்து விட்டு மீண்டும் அதிக உப்பு கலந்த நீரை கடலிலேயே விடுகின்றனர். இதன் மூலம் கரையில் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல்வளம் பாதிக்கப்படுவதோடு கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. மீனவர்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகர மாநகராட்சியின் மொத்த பரப்பளவில் அரசின் கணக்குப்படி சுமார் 4100 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 150 டிஎம்சி தண்ணீரை சேமிக்க வேண்டும். மழை நீரை சேமிப்பதன் மூலமே வெள்ள அபாயத்தை குறைக்க முடியும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னையின் சூழல் பன்மடங்கு வளரும். கடல்நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூலம் கடல் வளமும் பாதிக்காது. குறைந்தது மூன்று வருடங்களுக்கு தண்ணீரைத் தேக்க முடியும். இயற்கையான வழிகளே இவ்வளவு இருக்கின்றன.
முழு பூசணியை....
ஆனால்,இதை எதையும் செய்ய இந்த அரசு தயாராக இல்லை. தலைவிரித்தாடும் வறட்சியால் குடிநீருக்காக சென்னைவாசிகள் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகமே தவித்துக் கிடக்கிறது. வெளியூர்களிலிருந்து தலைநகர் சென்னைக்கு வரும் பயணிகள் தங்குவதற்கான விடுதிகள் ஏராளமாக கட்டப்பட்டுள்ளன. தற்போது, தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் மூடப்பட்டன. தண்ணீர் பிரச்சனையால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் பொது மக்கள் பயன்படுத்தும் இலவச மற்றும் கட்டண கழிப்பறைகள் சில மணி நேரமே திறக்கப்படுகிறது.
ரூ.1200க்கு கிடைத்த டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 5 ஆயிரம் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. அந்தளவுக்கு நிலை மை படுமோசமானதால் தொழிற்சாலைகள், ஐடி நிறுவ னங்கள், சிறு- நடுத்தர உணவகங்கள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக் ்குறையால் கழிப்பறை மூடப்படுகிறது என்று பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ‘மதிய உணவு’நிறுத்தப்படுகிறது. சிரமத்திற்கு மன்னிக்க வும் என வாடிக்கையாளருக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக சென்று கொண்டி ருப்பதால் சாப்ட்வேர் நிறுவனங்கள் பலவும் தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் மூடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின் றன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிகளை செய்து முடிக்கும்படி கட்டாயப்படுத்துவதாக ஊழியர்கள் புலம்பு கிறார்கள்.
உதட்டை தேய்ப்போர்...
சென்னை மட்டுமல்லாது திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, கரூர், ஈரோடு, சிவகங்கை, தூத்துக்குடி, விருது நகர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணா மலை, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் என ஏராளமான மாவட்டங்களில் குடிநீருக்கு திண்டாடி வரும் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். தண்ணீர் லாரிக்கு பின்னால் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். சாலை எங்கும் காலிக்குடங்களுடன் அலைந்து திரிந்து கொண்டே உள்ளனர் மக்கள். ஆனால் தண்ணீர் மட்டும் கிடைக்கவில்லை. தண்ணீர் கேட்டு போராடினால் ‘கேஸ்’ போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என காவல்துறை மிரட்டு கிறது. இதோடு மட்டுமின்றி, மெட்ரோ வாட்டர் கிடைக்கா மல் லாரி தண்ணீர் பிடிப்பதில் துவங்கும் குழாய் சண்டை, போர்வெல் அமைத்துள்ள உறவினர்கள், அக்கம்- பக்கத்தி னர் வீடுகளுக்கு சென்று ஒரு குடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்காத கோபத்தில் சமூக பிரச்சனைகளும் தலைதூக்கி யுள்ளன. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு என்னதான் செய்யப் போகிறது என்று மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இயற்கையானது. கடந்த 2017 ஆம் ஆண்டு இதை விடக் கடுமையான வறட்சி நிலவியது. அதையே சமாளித்த ஆட்சி எங்கள் ஆட்சி. எதிர்க்கட்சிகள் கூறுவது போல சென்னை மாநகரில் நாளொன் றுக்கு 1200 மில்லியன் லிட்டர் தண்ணீர் எப்போதும் விநியோகம் செய்தது கிடையாது. அதிகபட்சமாக ஒருமுறை மட்டும் 830 எம்எல்டி வழங்கியி ருக்கிறோம். தற்போது 525 எம்எல்டி தான் வழங்க முடி கிறது. ஆனாலும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வில்லை. இது அனைத்தும் எதிர்க் கட்சிகள் கிளப்பிய புரளிதான். இதுபோன்று தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம் என உள்ளாட்சித்துறை மிரட்டல் விடுக்கிறார். வெற்றுப்பேச்சு பேசி “உதட்டை தேய்க்கும் அமைச்சர் உள்ளங்காலை தேய்த்தாலாவது” சிறுபலன் கிடைக்க வாய்ப்புண்டு.