tamilnadu

img

ராஜபக்சே குடும்பத்தின் பிடி இறுகும் அபாயம் - பேரா. எஸ். இசட்.ஜெயசிங்

இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல்

எதிர்க் கட்சிகளிடையே ஒன்றுபட்ட பலமான கூட்டணி ஏற்படாத சூழ்நிலையில் பொதுஜன முன்னணி பெரும்பான்மை பெற்று மகிந்த ராஜபக்சே பிரதமராவார் என தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன. இலங்கையை நீண்ட காலம் ஆட்சி செய்த இலங்கை சுதந்திரக் கட்சியை  பின்னுக்கு தள்ளி அதில் உள்ளவர்களை உள்ளடக்கி ராஜபக்சே குடும்பத்தால் உருவாக்கப்பட்ட பொதுஜன முன்னணி  இலங்கை அரசியலில் முன் கள கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையில் சுதந்திரம் பெற்றதன் பின் பதினாறாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டு கோவிட் 19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பின்பு வரும் ஆகஸ்ட் 5 அன்று நடைபெற இருக்கிறது. கடந்த 2015  ஆம் வருட பொதுத்தேர்த லின் போது 77.66 %  வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் தற்போதைய கொரோனா காலத்தில் வாக்களிப்போர் விகிதம் குறையக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மும்முனைப்போட்டி

இலங்கையின் அரசியல் களத்தில் பல அரசியல் கட்சிகள் காணப்பட்டாலும்  ஐக்கிய தேசியக் கட்சி , இலங்கை சுதந்திரக் கட்சி  ஆகிய இரண்டு கட்சிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ள மையால்  தற்போதும் அதே நிலை வேறு பெயரில் தொடர்கிறது. அடிப்படை கட்டமைப்பில் மாற்றமின்றி தலைமைத்துவத்திலும் கட்சியின் பெயரிலும்  மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதை யும் காணலாம். இலங்கை சுதந்திர கட்சியின் ஆரம்பகால அங் கத்தவராக இருக்கும் ராஜபக்சே, சிறிலங்கா பொதுஜன முன்ன ணியை உருவாக்கி, இலங்கை சுதந்திர கட்சியையும் மற்றும் சில  கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்க, மற்றொரு பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது சிறி தளவான கட்சி அங்கத்தவர்களின் ஆதரவுடன் அதன் தலை வரான ரணில் விக்ரமசிங்க தலைமையில் போட்டியிட  முன் வந்துள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கடந்த வருடம் போட்டியிட்ட அதன் உப தலைவரான சஜித் பிரேம தாச அக்கட்சியின்  பெரும்பான்மை அங்கத்தவர்களின் ஆதர வுடன் பல்வேறு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு மக்கள் ஐக்கிய சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டி இடுகின்ற  தேர்தல் களத்தைக் காணலாம்.

கூட்டணிகள்

இவ்வாறு களம் காணும் இவ்விரண்டு வலது சாரி கட்சிகளே ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்க்கை காரணமாக சிங்கள மக்கள் சார்ந்த பல சிறு கட்சிகளும் சில தமிழர் அமைப்புகளும் இவ்விரு கூட்டணி சார்ந்து போட்டி இடும் போக்கையும் காண லாம். குறிப்பாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரிவு,  ஜாதிக ஹெல உறுமய,  இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி,  தேசிய தொழிலாளர் சங்கம்,  அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ்,  ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள்  இடம்பெற்றுள்ளன. ராஜபக்சே தலைமையிலான சிறிலங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜன நாயக இடது முன்னணி,  லங்கா சம சமாஜ கட்சி,  மஹஜன எக்சத் பெரமுன,  முற்போக்கு தமிழ் கட்சி,  டக்ளஸ் தேவானந்தா தலை மையிலான இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி,  கருணா தலை மையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பத்துக் கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெற்று போட்டியிடுகின்றன. இவ்விரு கூட்டணியில் சிறுபான்மை தமிழ்,  முஸ்லிம் கட்சிகளும் தனிப் பட்டவர்களும் இணைந்து போட்டி இடுவது  வர வேற்கத்தக்க அம்சமா கும்.  இவற்றுடன் முன்னாள் பிரதமரும்  இந்நாள் ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க சிறு அமைப்புகளுடன் இணைந்து தனித்து போட்டி இடுகிறார்.  இவ்வாறு இருபெரும் தேசிய கூட்டணிகள் நாடெங்கும் போட்டியிட  மற்று மொரு வளர்ந்துவரும் தேசிய கட்சி என்ற  இலக்கை நோக்கிச் செல்லும் ஜேவிபி எனப்படும் மக்கள் விடு தலை முன்னணி   அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தன்னையொரு இடது சாரி இயக்கமாக மூன்றாவது பெரிய கட்சியாக வெளிப்படுத்தி போட்டியிடுகின்றது.

தமிழ் தேசிய கூட்டணி

இலங்கையில் வட கிழக்கில் நிறைந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்களை அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ் கால அமைப்பாக இருப்பது டிஎன்ஏ எனப்படும் தமிழ்  தேசிய கூட்டணியாகும்.  இரா.சம்பந்தன் தலைமையிலான இக் கூட்ட ணியில் முன்னால் விடுதலை இயக்க போராளி குழுக்களும், தமிழ் தேசிய அமைப்புகளும்  இணைந்து  போட்டி இடுகின்றன.  குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சி,  EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர இடது முன்னணி,  PLOT எனப்படும் தமிழ் மக்கள் விடுதலை அமைப்பு,  TELO எனப்படும் தமிழ் ஈழ விடுதலை அமைப்பு என்பன இடம் பெற்றுள்ளன. இவை தவிர இன்னும் சிறு சிறு கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.  குறிப்பாக அகில  இலங்கை தமிழ் காங்கிரஸ்,  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றை  கூறலாம். டிஎன்ஏ ஆதரவு டன் வட இலங்கை முதலமைச்சராக  இருந்த விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி தமிழ் மக்கள் தேசிய முன்னணி என்ற கூட்டணியை தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறார். 

இவ்வாறு வட கிழக்கு தமிழ் பகுதியில் 20 க்கு மேற்பட்ட கட்சிக ளும் 15 க்கு மேற்பட்ட சுயேட்சை குழுக்களும் தேர்தல் களத்தில் உள்ளன. பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய  கட்சியானது சிறுபான்மையினரின் பிரதிநிதித்து வத்தை குறைக்கும் எண்ணத்துடன் பல குழுக்களை வட கிழக்கில் போட்டியிடச்  செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே  இப்பகுதியில் அளிக்கப்படும் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தமிழ் பேசும் வேட்பாளர்களை அடைந்தால் மட்டுமே  29  சிறு பான்மை பிரதிநிதிகள் தேர்வாகும் நிலை உருவாகும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் நம்பப்படுகிறது.

இலங்கையின் வட கிழக்கில் வாழும் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர்களும் “ தனி ஈழம் “ என்ற எண்ணத்தை விட்டு தேசிய நீரோடையை நோக்கி நகர்ந்து செல்வதை கடந்த கால தேர்தல் கூட்டணிகளும் , தேர்தல் முடிவுகளும் , தமிழ் தேசிய கூட்டமைப் பின் செயல்பாடுகளும் காட்டுகின்றன. இதனாலேயே ஒன்று பட்ட இலங்கைக்குள் தமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற கொள்கையை முன் வைத்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டணி  கடந்த தேர்தலில் 16 இடங்களை வென்று 3 வது பெரிய கட்சியாக வர முடிந்தது.  ஆனால் ஒருங்கிணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இந்தத் தேர்தலில் காணாமல் போய் விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

தமிழ் தலைவர்கள் ஆளுக்கொரு கட்சியை தொடங்கி களத்தில் உள்ளனர். இவர்களுடன் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்  மற்றும் இஸ்லாமிய கட்சிகளும் களத்தில் இருக்கின்றனர். இவர்களை தவிர்த்து இன்னும் பலரும் இரு பெரும் தேசிய கட்சிகளில் இணைந்து போட்டியிடுவதைக் காண லாம். இங்கும் வாக்குகள் சிதறி தமிழர் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உண்டு.  எனவே கடந்த காலங்களைப் போல் பெரும் எண்ணிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வெற்றி பெறும் என்ற நிலை ஏற்படாது என தெரிகிறது. 

மலையகத்தில் தேர்தல் கூட்டணி

இந்திய வம்சாவளியினர் எனப்படுகின்ற மலையக மக்கள் நுவரெலிய மாவட்டத்தில் செறிவாகவும்  மற்றைய மாவட்டங்க ளில் பரவலாகவும் இருப்பதால் தனி கட்சிகளாக போட்டியிடாது தேசிய கட்சிகளுடன் கூட்டணியாக இணைந்து போட்டியிடும் போக் கையே காண முடிகிறது. ஆரம்ப காலங்களில் தனிப்பெரும் தொழிற்சங்கமாக இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தற்போது  வலிமையான அனுபவ தலைவரின்றி ராஜபக்சே தலைமை யிலான பொதுஜன கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.  மறு புறம் பாரம்பரிய இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு சவாலாக, மலையக மக்களை பெரிய அளவில்  பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி  ஆகிய மூன்று தொழிற் சங்கங்கள் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெய ரில் சஜித் பிரேமதாச தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தி என்ற  கூட்டணியில் இணைந்து நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு, இரத்னபுரி, கேகாலை, கம்பஹா, களுத்துறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தி யுள்ளது. இவை தவிர இன்னும் பல சுயேட்சை குழுக்களும் களத்தில் உள்ளன.

மலையக மக்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் வட கிழக்கு தமிழர்களைக் போல் இல்லாமல் சிங்கள பெரும்பான் மையுடன் சேர்ந்து பரவலாக வாழ்வதால் தேசிய கட்சிகளுடன்  இணைந்தும்  தங்களது  தனித்துவம் இழக்கப்படாமலும் போட்டியிட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இலங்கை சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலம் முதல் மலைய கத்தின் மிகப்பெரிய தொழிற் சங்கம்  ஒன்று வர்த்தக நிறுவனம் என்ற அளவிற்கு செயல்பட்டதால் கல்வி , வேலை வாய்ப்பு, வீடமைப்பு, சுகாதாரம்  என பலவற்றில் பின்தங்கி, அதன் காரண மாக அரசியல் ஈடுபாட்டிலும் உத்வேகம் இல்லாமல் மலையக மக்கள் கடந்த காலங்களில்  இருந்துள்ளனர்.  இந்த நிலை படிப்படியாக மாற்றமடைந்து படித்தவர்கள்  , இளைஞர்கள்  வெளி வர இன்று ஒருவிதமான எழுச்சி, புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.  பொருளாதார ரீதியாக மிகக் கடுமையான வகையில் சுரண்டப் பட்டும், அரசியல் ரீதியாக அடிமைகளாக வஞ்சிக்கப்பட்டும் வந்த நிலையை மாற்ற மலையகத்தில் இளம் தலைவர்கள் தலை யெடுக்கத் தொடங்கி விட்டனர்.  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னரும் இன்றைய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளருமான தோழர் திலகராஜ்  அவர்கள் கூறுவதைப் போன்று முதலாளித்துவ அமைப்பில் கட்டமைக்கப்பட்ட பெருந் தோட்டங்களில் சுயாதீனம் மறுக்கப்பட்ட அம்மக்கள், அரசியல்  உள்ளாட்சி தொடங்கி தேசிய மட்டம் வரை உரிய நியாயமான பிரதி நிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று வரையிலும் போராடிக் கொண்டிருப்பதைக் காணலாம். இதன் ஒரு கட்டமாக துடிப்பான தலைவர்களைக் கொண்டு தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஒருங்கிணைந்து சஜித் தலைமையி லான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட முன் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். 

விகிதாச்சார தேர்தல் முறையின் பின்பே மலையக மக்க ளின் பிரதிநிதித்துவம்  அதிகரித்து வந்துள்ளது. எனவே அம் மக்கள் தமது பிரதிநிதியை உறுதிப்படுத்தும் வகையில்  சிந்தா மல் சிதறாமல், குறுகிய இலாப நோக்கை கருத்தில் கொள்ளாமல் 100% தமது வாக்குகளை  பயன்படுத்த வேண்டும். இதனை சற்று விபரமாக கூறுவதாயின்  68 % மலையகத் தமிழர் வாழ் கின்ற நுவரெலியா மாவட்டத்தில் 8  பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய நிலையில் 275 பேர் போட்டி இடுகின்றதை கருத்தில் கொண்டு தடுமாற்றமின்றி வாக்களிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் மலையக தொழிற் சங்கங்கள் தேசிய நீரோடையில் கலந்து தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றமை நல்ல அம்சமாகும். ஒன்றுபட்ட இலங்கை யில் பெரும்பான்மையும் சிறுபான்மையும் இணக்கமான நிலைப் பாட்டை எடுப்பதன் ஊடாகவே வளமான இலங்கையையும் மலையகத்தையும் எழுப்ப முடியும் என்ற அவர்களின் நிலைப் பாடு பாராட்டுதலுக்குரியதாகும். அதே வேளை வாக்காளர்க ளில் சரி பாதியாக உள்ள தோட்ட பெண்களையும்  வேட்பாளர் பட்டியலில் உள் வாங்கும் நிலையை இத் தொழிற் சங்கங்கள் எதிர் காலத்திலாவது கொண்டு வர முன் வர வேண்டும்.

இலங்கை இஸ்லாமிய மக்கள்

இலங்கை மக்கள் தொகையில் 9.9 %  என்ற எண்ணிக் கையினரான  இஸ்லாமிய மக்கள்  இலங்கையின் தேர்தல் அரசி யலில் முக்கிய இடத்தை வகித்து வந்துள்ளனர்.  தனித்து போட்டி இட்டு போதிய அங்கத்தவர்களைப் பெற முடியாதென்பதை அவர்கள் நன்கு அறிவர். உதாரணமாக கடந்த நாடாளுமன்ற  தேர்தலின் போது தனித்து போட்டியிட்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  வெறும்  0.40 %  வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இலங்கையில் இஸ்லாமியர்கள் பரவலாக இருந்த போதும்  குறிப்பாக கொழும்பு , கண்டி, அம்பாறை, புத்தளம், திருகோணம லை, மட்டக்களப்பு , மன்னார்  போன்ற தேர்தல் மாவட்டங்களில் அதிக அளவில் வாழ்கின்றனர் . எனவே இரு பெரும்  தேசிய கட்சிகளில் பெருமளவில் இணைந்து இதுவரை செயல்பட்டு வரும் இவர்கள் இம்முறையும் பெருமளவில் தேசிய கட்சிகளு டன் இணைந்தே தேர்தல் களத்தை சந்திக்க முன் வந்துள்ளமை  வரவேற்கத்தக்கதாகும். எனினும் கடந்த காலத்தில் கொழும்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னால் சர்வதேச ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இருப்பதாக சிங்கள பெரும்பான்மை நம்பியதால் சிங்கள மக்களுடனான இஸ்லா மிய மக்களின் அரசியல் உறவில் ஏற்பட்ட கசப்புணர்வு இத்  தேர்தல்  வாக்களிப்பில்  பிரதிபலிக்கலாம் என நம்பப்படுகிறது.

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

1935 டிசம்பர் 18 இல் இடதுசாரி இயக்கமாக லங்கா சம சமாஜ கட்சி  தொடங்கப்பட்டபோதும் 1943 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கமே  இலங்கையில் இடது சாரி இயக்கத்தின் ஆரம்பமாக கருதப்படுகிறது. அதன் பின் பல்வேறு காலங்களில் மார்க்சிய லெனினிய அடிப்படையில் பல்வேறு இடதுசாரி கட்சிகள், குழுக்கள் உருவாகின.

ஆரம்ப காலம் முதல் 1960, 70 களில் இடதுசாரி இயக்கங் கள் என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்ரமசிங்க , பிலிப் குணவர்தன,  சண்முகதாசன் போன்றோரின் தலைமையில் வலிமையுடன்  இருந்தன. அதன்பின் பேரின வாத முதலாளித்துவ அரசியல் களத்தில் சரிவைச் சந்திக்கலாயின.  கலாநிதி விக்ரமபாகு கருணா ரட்ன தலைமையிலான நவ சமாஜ கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சி, ஐக்கிய சோசலிச முன்னணி போன்ற இடதுசாரி அமைப்புகள் தம் கொள்கையில் இன்றும் உறுதி யாக இருக்கின்றன.  தனிச்சிங்கள சட்டத்தின் பின் தோன்றிய சிங்கள இடதுசாரி தலைவர்கள் வர்க்க ரீதியாக சிங்கள தமிழ் முற்போக்கு சக்திக ளை ஒருங்கிணைத்து அரசியல் பலத்தை நிலைநிறுத்த முடியா மல் தடுமாறுகின்றனர். எனவே தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் தேசிய கட்சிகளுடன் குறிப்பாக பொதுஜன முன்னணியுடன் இணைந்து தேர்தல் போட்டியை சந்திக்கின்ற நிலை காணப்படுகிறது. அத்துடன் ஜனநாயக இடதுசாரி முன்னணி ,ஐக்கிய இடது முன்னணி , ஐக்கிய சோஷ லிஸ்ட் கட்சி, சோசலிச முன்னணி  என பல்வேறு சிறிய அளவி லான  இடதுசாரி இயக்கங்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் அவற்றிற்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது.

ஆட்சி அமைக்கப்போவது யார்? 

இலங்கையில் கடுமையான கொரோனா  நெருக்கடி இருந்த போதும்  ஆகஸ்ட் 5 ம் தேதி  தேர்தலை நடத்த ஆளும் தரப்பு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.  எதிர்க் கட்சிகளிடையே ஒன்று பட்ட பலமான கூட்டணி ஏற்படாத சூழ்நிலையில் பொதுஜன முன்னணி பெரும்பான்மை பெற்று மகிந்த ராஜபக்சே பிரதமராவார்  என தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன. இலங்கையை நீண்ட காலம் ஆட்சி செய்த இலங்கை சுதந்திரக் கட்சியை  பின்னுக்கு தள்ளி அதில் உள்ளவர்களை உள்ளடக்கி ராஜபக்சே குடும்பத்தால் உருவாக்கப்பட்ட பொதுஜன முன்னணி  இலங்கை அரசியலில் முன் கள கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வருட ஜனாதிபதி தேர்தலில் இம்முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றமையால் மக்கள் மத்தியில் ஆழமான இடத்தைப் பெற்றுள்ளது. எனவே தாங்கள் நினைத்த சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தை நிறுவும் முனைப்பு டன் ராஜ்பக்சே குடும்பம் செயல் பட்டு வருகிறது. அதே நேரம் முற் போக்கான சிங்கள மக்களும் தலைவர்களும் ராஜபக்சேவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதையும் மறுப்பதற் கில்லை.

பிளவுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி

இது வரை சுதந்திரம் பெற்றது முதல் பல தடவை ஆளும் கட்சி யாகவும்  எதிர்க் கட்சியாகவும் மக்கள் மத்தியில் நன்கு அறிமுக மாகி இருந்த  ஐக்கிய தேசியக் கட்சி இறுதிக் கட்டத்தில் ரணில் அணி - சஜித் அணி என பிளவு படலாயிற்று. ஜனாதிபதி தேர்தலின் போது சஜித்தை வேட்பாளராக ஏற்றுக்கொண்டு செயல்பட்ட ரணில் விக்ரமசிங்கே இறுதி கட்டத்தில் பிரிந்து சென்று தனித்து போட்டியிட எண்ணியமை, தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தி யில் ராஜபக்சேவின் கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உரு வாக்கித் தந்துள்ளது. இதனால் ராஜபக்சே குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கி றது. இதுவரை சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் கொடுத்து வந்த அழுத்தத்திற்கும் இடமில்லாமல் போய் விடக் கூடிய சூழ் நிலையே தெரிகிறது. வடக்கு, கிழக்கில் தமிழர்களும் இஸ்லாமி யர்களும் ஒன்றுபட்டு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போக்கை யும் காண முடியாதிருக்கிறது. எனவே வரும் தேர்தல் ராஜபக்சே குடும்பத்திற்கு வாய்ப்பாக அமைய வாய்ப்பு உண்டு.

மக்களின் மன நிலை

கடந்த காலங்களில் இலங்கையில் பெரும்பான்மையி னரும் சிறுபான்மையினரும் வெவ்வேறு எதிர் பார்க்கைகளின் அடிப்படையிலேயே வாக்களித்து வந்துள்ளனர். சிறு பான்மை மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் ராஜபக்சே குடும்பத்தி னரின் செயல்பாடுகளின் மீது பெரும் அச்சமும் அதிருப்தியும் கொண்டுள்ளனர். நடந்து முடிந்த உள் நாட்டுப் போரும் இராணு வத்தின் கண் மூடித்தனமான தாக்குதலும் அதனால் ஏற்பட்ட வடுக்களும்  இன்று வரையும் ஆறாத ரணமாக தமிழர்கள் இடையே இருப்பதும் ,  அந்த அச்சம் காரணமாக அவர்களுக்கு வாக்களிப்பதை தமிழ் மக்கள் தவிர்த்தே வந்துள்ளனர். மறு புறம் கோத்தபயவும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவும்  தங்களது தேர்தல் பரப்புரைகளில் கூறும் தேசபாதுகாப்பு, தீவிரவாத  அச்சுறுத்தல் என்ற மோடி பாணி முழக்கம் பெரும்பான்மை சிங்கள மக்களை பெரிதும் கவரலாயிற்று. மோடியைப் போன்றே ராஜபக்சேவும் தன்னால் மட்டுமே நாடு துண்டாடப்படாமல் பாதுகாக்க முடியும் என்ற கோஷம் சிங்கள மக்களை இன்றும் வசீகரித்து வருகிறது. ஈஸ்டர் அன்று நடந்த தேவாலய குண்டு வெடிப்பை  இலங்கை மக்கள்  அச்சத்துடனே யே பார்த்தனர். மீண்டும் ஒரு உள் நாட்டுப் போர் சூழல் ஏற்படுவ தையும்  அவர்கள் விரும்பவில்லை.

மேலும் கடந்த கால ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி மக்க ளின் எதிர் பார்க்கைகளை எந்த வகையிலும் நிறை வேற்றாத தால் மக்களிடையே அதிருப்தியும் அவநம்பிக்கையும் மேலோங்கி காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, அகதிகள் மறு சீரமைப்பு, விலை வாசி உயர்வு, வேலை வாய்ப்பு என எல்லா துறைகளிலும் பின்னடைவே காணப்படுகிறது. எனவே மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ஜேவிபி போன்ற அமைப்புகள் புதிய மாற்றத்தை தர முன் வந்தபோதும் மக்கள்  இன்னும் பழைய ஆட்சியாளர்களையே தேடுகின்றனர். மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கையில் பெரும்பான்மை சிறுபான்மை  என்ற இரண்டு பகுதியினரும் நாட்டின் நலன் கருதி இணைந்து செயல் பட வேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும். கல்வி அறிவில் மிகச்சிறந்த இலங்கை மக்கள் தேர்தல் களத்தில் இன வாதத்திற்கு இரையாகி விடக்கூடாது.  இரு பகுதி மக்களும் தலை வர்களும் நாட்டின் நலன் கருதி கவனமாகவும் பொறுமையாக வும் செயல்பட வேண்டும். 

இன்றைய தேர்தலில் “ ஈழம் “ என்ற கோஷமோ பிரிவினை வாத பரப்புரையோ இல்லை. ஆனால் ராஜபக்சே குடும்பத்தி னர், இல்லாத ஒரு அச்சத்தை பெரும்பான்மை சிங்கள மக்களி டையே விதைப்பதில் தீவிரம்  காட்டி  வருகின்றனர். மோடி  இந்து மத மக்களை  மதத்தின் பெயரால் ஒருங்கிணைத்து வெற்றி பெற  முயன்றதைப் போன்று ராஜபக்சே குடும்பத்தினர் பொருளாதார பின்னடைவை பின்னுக்குத்தள்ளி  இன மத உணர்வை முன் னிறுத்தி வெற்றி பெற முயல்கின்றனர். அதன் தொடக்கமாகவே ஜனாதிபதி பதவி ஏற்பை  முதற் தடவையாக அனுராதாபுரத்தில் நடத்தினர். 

ராஜபக்சேவின் அதி தீவிர போக்கு

சிறு பான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் தன்னால் வெற்றி பெற முடியும் என பெரும்பான்மை மக்களிடம் ராஜபக்சே உரை யாற்றி வருகிறார். அதன் ஒரு அம்சமாகவே காலி, இரத்னபுரி, மாத் தளை மாவட்டங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் கணிசமான அளவில் வாழ்கின்ற போதும் அந்த மாவட்டங்களில் பொதுஜன கூட்டணி சார்பில் தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் யாரையும் போட்டி யிட அவர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இது போன்ற  செயல் இன ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்பதை அவர் உணர வேண்டும். இன்றைய அவரது அமைச்சரவையில் ஒரு இஸ் லாமியர் கூட  இல்லை என்பதும்  கடந்து போய்விடக்கூடியதல்ல. மகா சங்கத்தையும் பௌத்த பிக்குகளையும் உடன் இறுத்திக்கொள் ளும் ராஜபக்சே தேசிய தலைவராக இல்லாமல் ஒரு இனத்தின் தலை வராகவே தன்னை காட்டிக் கொள்வது மக்களாட்சியின் மாண்புக ளை சிதைத்து வருகிறது. 2/3  பெரும்பான்மை பெறுவதன் ஊடாக  விகிதாச்சார பிரதிநிதித் துவத்தை ஒழித்துக் கட்டுவது உட்பட, மோடியைப் பின்பற்றி அரசி யல் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரவும் அவர் திட்டம் இடுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தேச நலன்

இப்படியானதொரு பதற்ற நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் சிந்தித்து வாக்க ளிக்க வேண்டும்.  மக்கள் தொகையில் 26 %  என்ற விகிதத்தில் இருக்கும் சிறுபான்மையினர்  தனித்து நின்று போட்டியிட ஒரு வேளை எண்ணினால் அது அவர்களுக்கும் தேசத்திற்கும் ஆபத் தான பலனை தரும் .  ஆனால் அதே வேளை முழுமையாக தமது வாக்குகளை சரியான வகையில் பயன்படுத்த தவறினாலும்  மிகப் பெரும் வரலாற்று தவறினை தம்மக்களுக்கு  செய்தவர்க ளாகிவிடுவர்.  எனவே தமக்குரிய பிரதிநிதித்துவத்தை முழுமையாக பெறுவதன் மூலமே அவர்கள் தமக்குரிய உரிமைகளையும் தேவைகளையும் நாடாளுமன்றத்தின் ஊடாக பெறமுடியும்.

கட்டுரையாளர்: இலங்கை பேராதனை பல்கலைக்கழக 
முன்னாள் உதவி விரிவுரையாளர். Mail :jeyasinghsz24@gmail.com