தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சீதாம்பாள்புரம் மாதா மஹாலில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன்-ஆர். தெய்வானை மகன் பொறியாளர் தெ.ர.சிவராஜனுக்கும், சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ்-செ.சந்திரா மகள் பொறியாளர் ச.செ.பிரிதிவிக்கும் வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில், தமுஎகச மாநில கௌரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், பண்ணவயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சு.ராஜாத்தம்பி மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்கத்தினர், அரசு அலுவலர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.