tamilnadu

img

நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி 

 தஞ்சாவூர் ஆக.31- நீர் வளப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பாக நடைபெற்றது. பேரணியை பட்டுக்கோட்டை கோட்ட உதவி செயற்பொறி யாளரும்(ஊரக வளர்ச்சி) சேதுபாவாசத்திரம் ஒன்றிய மண்டல அலுவலருமான கருப்பையா துவக்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கை.கோவிந்தராசன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியபெருமாள், நவரோஜா கலந்து கொண்டனர். தூய்மை இந்தியா இயக்கத்தின் மத்திய மேற்பார்வை அலுவலர்கள், பேராவூரணி ஒன்றியம் சொர்ணக்காடு, ஒட்டங்காடு, களத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் கழிவறை பயன்பாடு குறித்து மக்களிடம் கருத்துக்கள் கேட்டறிந்தனர். தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மழை நீர் சேகரிப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் பேரணி நடைபெற்றது. மேற்பார்வையாளர் டி.சந்துரு தலைமையில் டி.கோவிந்தராசு, வி.பாலா, பி.கருணாநிதி, பி.ஜெயபாரதி பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோ.செல்வம்(கி.ஊ) சடையப்பன்(வ.ஊ) மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ், த.கண்ணன், மா.சாமிநாதன், வீரமணி, விமலா வட்டார ஒருங்கிணைப்பாளர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர்.