tamilnadu

img

நாட்டின் அளப்பரிய கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் தமிழக ஆளுநர் வலியுறுத்தல்

 தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையமும், தில்லி சங்கீத் நாடக அகா டமியும் இணைந்து, தஞ்சாவூர் தென் னக பண்பாட்டு மையத்தில் கலை களின் சங்கமத் திருவிழா என்ற பெயரில் ஐந்து தினங்களுக்கு பல்வேறு மாநில இசை நிகழ்ச்சிகளை நடத்து கின்றன. இந்த நிகழ்ச்சிகளின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற் றது. தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குநர் எம்.பாலசுப்பிரமணியன் வர வேற்றார். தமிழக வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநி லங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தி லிங்கம், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோர் புதுதில்லி சங்கீத நாடக அகாதெமி செயலாளர் ரீடா சுவாமி சௌத்ரி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து பேசுகையில், கலை ஞர்கள் நாட்டின் அளப்பரிய கலைகள் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இம்மாதிரியான விழாக்கள் நாட்டின் பல்வேறு கலை களை போற்றி பாதுகாக்கும். கலை ஞர்களுக்கும் மக்களுக்கும் இடையே யான நெருக்கத்தை ஏற்படுத்தும் வித மாக அமைந்துள்ளது. மேலும், இவ் விழாக்கள் இளம் கலைஞர்கள் தங்க ளது திறமைகளை வெளிப்படுத்தவும், மெருகூட்டிக் கொள்வதற்கும் மேடை யாக பயன்படுகிறது. தஞ்சாவூரை கலைகளின் பொக்கி ஷமாகவும், தஞ்சாவூர் பெரிய கோயிலை தட்சிணமேரூ என்றும் அழைப்பது வியப்புக்குரிய ஒன்று அல்ல. ஏனென்றால் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னரே கட்டிடக் கலை களின் நுணுக்கங்களை தமிழர்கள் அறிந்து இருந்ததற்கான ஒரு சான்றாக இன்றளவும் சோழர்கள் கட்டிய இந்த வரலாற்று சின்னம் நிமிர்ந்து நிற்கிறது. சோழர்கள் காலத்துக்கு பிறகு இசை இப்பகுதியில் தழைத்தோங்கி யது. தமிழகத்தின் நாட்டுப்புறக் கலை கள் மற்றும் தமிழ் இசை குறித்த குறிப்பு கள் சங்க கால இலக்கியங்களில் பரவ லாக கிடைக்கிறது.ஆறாம் நூற்றாண்டு முதல் 10 -ம் நூற்றாண்டு வரை தெய்வீக தமிழ் இசை தமிழகத்தில் தழைத் தோங்கியது.ஆழ்வார்கள், நாயன் மார்கள், அருணகிரிநாதர் மூலமாக பக்தி இசையின் உருவாக தமிழ் இசை தழைத்தோங்கியது” என்றார். முன்னதாக சிறப்பு குழந்தை களுக்கான கலாச்சார பாதுகாப்பு மையத்தை ஆளுநர் திறந்து வைத்தார். சங்கீத் நாடக அகாடமியின் துணைத் தலைவர் அருணா சாய்ராம் நன்றி தெரி வித்தார். விழாவினைத் தொடர்ந்து பல் வேறு மாநிலங்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் தொடங்கின. காலையில் கருத்தரங்கமும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் செப்டம்பர் 14-ம் தேதி வரை தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநில கலைஞர்கள் பங் கேற்று வருகின்றனர்.