tamilnadu

தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

மின் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு
மன்னார்குடி, அக்.20- தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு மன்னார்குடி நகர மின்வாரிய அலுவலகத்தில் நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது.  வடகிழக்கு பருவ மழை காலத்தில் மின் பணியாளர் மற்றும் பொதுமக்களுக்கு மின் விபத்து ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், இடி மின்னல் மற்றும் கடும் மழை காரணமாக மின் பழுது ஏற்பட்டு மின் தடையேற்பட்டால் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தி மின் விபத்தின்றி விரைந்து மின்சாரத்தை சீர மைப்பது குறித்தும், பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு தொடர்பான பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்து வது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.  மேலும் இதுகுறித்து நகர மின்வாரிய உதவி செயற்பொறி யாளர் சம்பத் பேசுகையில், மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்தக்காரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாத னங்களை மட்டும் வாங்க வேண்டும், ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பணியா ளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நெல் விதைப்பு விழிப்புணர்வு முகாம் 
தஞ்சாவூர், அக்.20- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் தரிசு உழவு செய்தல் மற்றும் நேரடி நெல் விதைப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் அனைத்து வரு வாய் கிராமங்களிலும் திட்டமிடப்பட்டடு நடைபெற்று வருகிறது. விதைக் கருவியைப் பயன்படுத்தி வரிசையாக விதைத் தால் அதிக தூர் வெடித்து கூடுதல் மகசூல் கிடைக்கும் என்ப தால் விவசாயிகள் அனைவரும் விதைக்கருவி மூலம் விதைப்பு மேற்கொள்ள மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் திலகவதி அறிவுறுத்தியுள்ளார்.  மதுக்கூர் வட்டார வேளாண்மைத்துறை அதிகாரிகளால் ஆவிக்கோட்டை கிராமத்தில் விதைப்பு கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு குறித்த செயல்விளக்கம் நடைபெற்றது. ஆவிக்கோட்டை கிராமத்தில் விவசாயி ராஜேந்திரன் என்ப வர் வயலில் நடப்பு சம்பா பருவத்தில் விதைப்புகருவி மூலம் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்கம் கிராம விவசாயி களுக்கு செய்து காட்டப்பட்டது.  செயல் விளக்கத்தில் மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலர் ஜெரால்டு ஞானராஜ், விவசாயிகளிடம் மழை யைப் பயன்படுத்தி உழவு மேற்கொண்டு விதைக்கருவி மூலம் நெல் விதைப்பு செய்து அதிக மகசூல் பெற்று கூடுதல் வரு மானம் பெறுமாறு ஆலோசனை வழங்கினார்.

பயணியர் நிழற்குடை அமைத்துத் தரக் கோரிக்கை
தஞ்சாவூர், அக்.20- தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், பேராவூரணி- பெருமகளூர் செல்லும் நெடுஞ்சாலைத் துறை சாலையில் சின்ன ரெட்டவயல் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற் குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் சிறகுகள் நற்பணி மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சின்ன ரெட்டவயல் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப் பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு நிழற்குடை பழுதடைந்து விட்டதால் அதை இடித்து விட்டனர். இது நாள் வரை பயணியர் நிழற்குடை கட்டித் தரவில்லை.  இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சின்னரெட்டவயல், நெல்லடிக்காடு, வீரக்குடி, மணக்காடு உள்ளிட்ட கிரா மங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இங்கிருந்து தான் செல்ல வேண்டும். மழை நேரங்களில் பொதுமக்கள் ஒதுங்க இடம் இல்லாமல் நனைந்து விடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே இந்த இடத்தில் பயணியர் நிழற்குடை அமைத்து தந்து பொதுமக்கள் சிரமம் போக்க வேண்டும் என பேரா வூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசுவிடம் சிறகு கள் நற்பணி மன்றத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

வர்த்தகர் கழக ஆலோசனைக் கூட்டம் 
தஞ்சாவூர், அக்.20- பேராவூரணி நகர வர்த்தகர் கழகத்தின் அவசர ஆலோ சனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. வர்த்தகர் சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்தி ரன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன் வரவேற்றார். கட்டுப்பாட்டுக் கமிட்டி உறுப்பி னர்கள் டாக்டர் மு.சீனிவாசன், கே.பி.நல்லசாமி முன்னிலை வகித்தனர். காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள் குமார் கலந்து கொண்டார்.  தீபாவளி பண்டிகையையொட்டி நகரில், கடைவீதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள், லாரியில் குறிப்பிட்ட நேரத்தில் லோடு இறக்குதல், கடை வீதிக்கு வரும் வாகனங்களை நிறுத்துதல், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுதல், பராமரிப்பு இன்றி திரியும் கால்நடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களுக்கு தீர்வு காணுதல், குறித்து ஆலோசித்து, முடிவெடுக் கப்பட்டது. கூட்டத்தில் வியாபாரிகள், லோடு மேன் சங்கத்தி னர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி நன்றி கூறினார்.