தஞ்சாவூர், மே 10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட செருவாவிடுதி, குறிச்சி உள்ளிட்ட பகுதி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஒரு வார காலத்திற்குள் பிரசவிக்க உள்ள 24 தாய்மார்களுக்கு, முதல் கட்டமாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சளி மாதிரி எடுக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். மேலும் எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் துரை.நீலகண்டன் நன்கொடையாக வழங்கிய தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் ஆகியவை கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது.