tamilnadu

ரேசன் பொருட்களை  இலவசமாக வழங்குக!

 கும்பகோணம், ஆக.17- கொரோனா காலத்தில் ரேசன் கடையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை உணவு பொருட்களை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக பணம் வசூல் செய்வதை கண்டித்தும் தொடர்ந்து இலவசமாக பொருட்களை வழங்க கோரியும் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் திரு விடைமருதூர் தெற்கு  ஒன்றியம் நாச்சியார்கோ விலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாச்சியார் கோவில் கிளை செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிவேல் விளக்க உரை ஆற்றினார்.