tamilnadu

அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை கண்டு கொள்ளப்படாத டெல்டா கடைமடைப் பகுதி நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய விவசாயிகள்

தஞ்சாவூர், செப்.12-  தஞ்சை மாவட்டத்தின் கடை மடைப் பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பவில்லை எனவும், கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை அனைவருக்கு நன்றி தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். தஞ்சை மாவட்டம் சேது பாவாசத்திரம், பேராவூரணி ஒன்றி யத்தில் பெருமகளூர் பெரிய ஏரி, பட்டங்காடு பெரிய ஏரி, தூராங்குடி மைனர் ஏரி, பாப்பாங்குளம், தென் பாதி ஏரி, செம்மங்குடி ஏரி, சோலைக்காடு ஏரி, ருத்ரசிந்தாமணி ஏரி, குளக்குடி ஏரி, கொரட்டூர் ஏரி, விளங்குளம் ஏரி, ஊமத்தநாடு ஏரி, கைவனவயல் ஏரி என நூற் றுக்கணக்கான ஏரிகள் துார் வாரப் படாததாலும், வரத்து வாய்க்கால் கள் அடைபட்டுக் கிடப்பதாலும், ஏரி களில் நெய்வேலி காட்டாமணக்கு, சீமைக்கருவேல மரங்கள் மண்டிப் போய் உள்ளன.  இதனால் கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வரு கிறது. அத்துடன் கடந்த 4 ஆண்டு களுக்கு மேலாக பருவமழை சரி வர பெய்யவில்லை. கடந்த 3 வரு டங்களாக காவிரி நீர் முறையாக இப்பகுதிக்கு வந்து சேராத நிலை யில், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் வேதனை யடைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 13 ஆம் தேதி டெல்டா பாசனத்திற் காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், கல்லணையிலிருந்து  17ஆம் தேதி திறக்கப்பட்டது. இருப் பினும் கடைமடை பகுதிகளில் சில இடங்களுக்கு தண்ணீர் குறைவாக வும், ஒருசில இடங்களுக்கு ஓரள வும் சென்றன. இருப்பினும் கடந்த சில நாள்களாக உபரி நீர் அதிகள வில் திறக்கப்பட்டு, வீணாக கடலில் கலந்து வருகிறது. ஆனால் கடை மடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங் களுக்கு தண்ணீர் வரவில்லை என அப்பகுதி விவசாயிகள் தெரி வித்துள்ளார். இதை தொடர்ந்து வியாழக் கிழமை பேராவூரணி, சேதுபாவா சத்திரம் பகுதிகளில், “கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் கானல் நீர் தானோ, ஏரிகளில் எருக்கஞ்செடி காடுகள், வரத்து வாய்க்கால்கள் புதர் மண்டிக்கிடக்கும் அவலம், கடைமடை விவசாயிகளை கொஞ்ச மும் கண்டுகொள்ளாத பொதுப் பணித்துறை, மாவட்ட ஆட்சியர், மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ., அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்,” எனவும் போஸ்டரை விவசாயிகள் ஒட்டியுள்ளனர்.