தஞ்சாவூர், மார்ச் 16- அரசாணைகள், மாவட்ட ஆட்சி யர் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், தஞ்சையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்ட செயலாளர் வழக்கு ரைஞர் பி.ஜேசுதாஸ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் இ. இமானுவேல் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சா.ஜீவபாரதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.ஜெயபால் நிறைவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் கே.அன்பு, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராஜா, டி. மணிவேல், எஸ்.ராஜூ, எம்.கலிய மூர்த்தி, வி.ஜெயராமன், எம்.மாரி முத்து, எம்.தங்கம் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 10.05.2000 க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு அரசாணை எண் 348 ன்படி, 1.10.2017 முதல் மாத ஊதியம் ரூ.6 ஆயிரத்து 860 வழங்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவர்களுக்கு மாத ஊதியம் ரூ.4,960, துப்புரவு தொழிலாளர்களு க்கு ரூ. 5, 310 மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்டவை ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருச்சிராப்பள்ளி
இதே போல் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் திங்களன்று ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், பொரு ளாளர் சரவணன், அழகர்சாமி, முரு கேசன் ஆகியோர் பேசினர். ராம சாமி, பழனியாண்டி, முனியாண்டி, பாலசுப்ரமணியன், மூர்த்தி, சாந்த குமார், சுப்பிரமணி உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முரு கேசன் நன்றி கூறினார்.
கரூர்
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தின் மாவட்ட குழு சார்பில் கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கா.கந்த சாமி தலைமை வகித்தார். ரயில்வே ஊழியர் சங்க மாநில நிர்வாகி சாம்ப சிவன், கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றி னார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.