tamilnadu

img

பெரியார் பிறந்த நாள்  ஊர்வலம் - கூட்டம்

 தஞ்சாவூர், அக்.1- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தந்தை பெரி யாரின் 141 ஆவது பிறந்த நாள் ஊர்வலம் மற்றும் காந்தி பூங்கா அருகில் தெருமுனை கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் அரங்கசாமி வர வேற்றார். பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக தலைவர் சித்தார்த்தன், பட்டுக்கோட்டை மாவட்ட திரா விடர் கழகச் செயலாளர் வீரையன், தலைமை ஆசிரியர் புர வலர் வேலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன் சிறப்புரை யாற்றினார்.  பெரியார் உருப்பட ஊர்வலத்திற்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஊர்வலத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து தெருமுனை பொதுக்கூட்டம் நடை பெற்றது.