tamilnadu

ஆதிதிராவிடர் மக்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் 

 தஞ்சாவூர் ஆக.24- ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மக்கள் சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்ற அடிப்படையில், சுய தொழில் தொடங்க ரூ.1.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை கடனுதவிக்கு 30 சதவிகிதம் வரை மானியம் மற்றும் அரசுத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.  இத்திட்டங்களில் பயன் பெற விரும்பும் தகுதியுடைய நபர்கள் http://application.tahdco.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் உள்ள அறை எண் 22-ல் தாட்கோ மாவட்ட மேலாளரை நேரடியாகவோ அல்லது 04362-256679 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.