tamilnadu

img

ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்து - 33 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டம் கேஷ்வன் என்ற இடத்தில் கிஷ்த்வாருக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெரும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 33 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.