இளம்பிள்ளை, ஜூன் 19- சேலம், வேம்படிதாளம் அங்கன்வாடி மையம் பழு தடைந்த நிலையில் இருந்து வருகின்றன. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே வேம்படி தாளம் ஊராட்சி பகுதியில் ஆதிபராசக்தி கோயில் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. ஆனால், இந்த அங்கன்வாடி மையம் பழுத டைந்தும், முட்புதர் சூழ்ந்தும் உள்ளது. இதனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக அதன் அருகே உள்ள வேளாண்மை அலுவலர் தங்கும் விடுதியில் அங் கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடத்தில் மின் வசதி இல்லா மல் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால், குழந்தைகள் நலன் கருதி பழுத டைந்துள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தை இடித் துவிட்டு அவ்விடத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி தரப்பட வேண்டுமென ஊர் பொதுமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.