சேலம், பிப்.16- சேலம் அருகே உள்ள மல்லூருக்குள் புறநகர் பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி ஞாயிறன்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருவழிச்சாலையாக இருந்த சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழி சாலை யாக மாற்றப்பட்டது. இந்த சாலையில், மல்லூர் பகுதி யில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலை விற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட் டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்ட பின்பு சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், பேருந்துகள் மல்லூர் ஊருக்குள் வர வேண்டுமென அப்பகுதி மக்கள் அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அனைத்து பேருந்துகளும் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை வழியாகவேச் செல்கிறது. இந்த நிலையில், மல்லூர் பகுதி மக்கள் புறநகர் பேருந்துகள் மல்லூர் ஊருக்குள் வர வேண்டும் என வலியுறுத்தி சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து வந்த புறநகர் காவல் துணை கண் காணிப்பாளர் உமாசங்கர் மற்றும் போக்கு வரத்து துறை அதிகாரிகள் மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இப்பேச்சுவார்த்தையில், சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊருக்குள் பேருந்துகள் வர நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிடப் பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.