சேலம், பிப். 22- தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த உரிய நடவ டிக்கை தேவை என திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் வலியு றுத்தியுள்ளார். சேலம், அம்மாப்பேட்டையில் உள்ள கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒவ்வொரு துறையிலும் பல்கலைக்கழக அளவில் முதல் மற்றும் இரண்டாவது இடம் பிடித்த மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் தனி நட னம், குழு நடனம், குறு நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோபோ சங்கர், டிக் டாக் செயலியை இளைஞர்களும், பெண்களும் தவறாக பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார். மேலும் இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து மிக வும் வருத்தமளிப்பதாக தெரிவித்த அவர், திரைத்துறை யில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த உரிய நடவ டிக்கை தேவை என வலியுறுத்தினார்.