இளம்பிள்ளை , நவ.5- இளம்பிள்ளை அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையி னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை, மெய்ய னூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (66). இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து பீடியில் சுருட்டி விற்பனை செய்து வருவதாக மகுடஞ்சாவடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதனன்று சின்ன தம்பி வீட்டில் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இதனைய டுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் சிறையில் அடைத்த னர்.