tamilnadu

img

கபசுர நீர் வழங்கல்

சேலம், மே 7- சேலம் மாநகர காவல் துறையினருக்கு கபசுர சூரண குடிநீர் வழங்கப்பட்டது. சேலம் மாநகரில் கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 1500க்கும் மேற்பட்ட காவலர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகை யில் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் கபசுர சூரணம் குடிநீர் வழங்கப் பட்டது. இந்நிகழ்வில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி. வெங்கடாச்சலம், மாநகர காவல் துணை ஆணையாளர் செந்தில், தங்கதுரை மற்றும் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பாலசுப்பிர மணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இதேபோல் சேலம் மாநகர ஆணையர் அலுவல கத்தில் காவல் துறையினர் மற்றும் செய்தியாளர் களுக்கு கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது.