இளம்பிள்ளை, அக். 3- இளம்பிள்ளை அருகே ஆளில்லாமல் இயங்கும் பேட்டரி காரை பொறியியல் கல்லூரி மாணவன் கண்டுபிடித்துள்ளார். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் விசைத்தறி தொழில் புரிந்து வரும் சுரேஷ்குமாரின் மகன் உதய குமார் (20). இவர் தற்போது திருச்சி அண்ணா பல் கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த மாணவன் ஏற்கனவே வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில், தற்பொழுது டெக்இன்வெர்ட்டர் என்னும் ஆளில்லாமல் இயங்கும் பேட்டரி கார் ஒன்றை தயாரித்துள்ளார்.
அந்த கார் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் நாம் இருக்கும் இடத்திலிருந்தே வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயக்கும் விதத்தில் தயா ரித்து உள்ளார். மேலும், உதயகுமார் கூறுகையில், நான் ஏற்கனவே 36 க்கும் மேற்பட்ட புதிய கண்டு பிடிப்புகளை செய்து உள்ளேன். தற்போது கொரோனா தாக்கத்தினால் கல்லூரி விடுமுறை என்ப தால் நான் விசைத்தறி தொழில் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து இதுபோன்று கண்டு பிடிப்புகளை செய்து வருகிறேன். எனவே, என்னை ஊக்குவிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமெனவும், மேலுல் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து நாட்டிற்கு சேவை புரிவேன் எனவும் கூறி னார்.