சேலம், பிப். 22- சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பசை தயாரிப்பு ஆலையில் சனியன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. சேலம் மாநகரின் மையப்பகுதியான செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு பகுதியில் ராஜகணபதி என்பவருக்கு சொந்தமான பசை தயாரிப்பு ஆலை உள்ளது. இந்நிலையில் சனியன்று ஆலை யில் திடீரென தீ பற்றி எரிந்து அதிகளவில் கரும்புகை வெளியானது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக் குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பசை தயாரிப்பு மூலப் பொருளான ஸ்டார்ச், இயந்திரங்கள் உள் ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட் கள் தீயில் கருகி சேதமடைந்தது. தீ விபத்து குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மின் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற் பட்டிருக்க கூடும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.