tamilnadu

img

பிரபல வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதி மறைவு

சேலம், ஆக. 16- சேலத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதி ஞாயிறன்று காலாமானார்.  சேலத்தில் மூத்த வழக்கறிஞராக பணி யாற்றி வந்தவர் எஸ்.பார்த்தசாரதி(85). இவர் 1960ல் இருந்து சேலத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடர்ந்து வந்தார். இவரின் குடும்பம், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கம்யூனிஸ இயக்க குடும்பமாகும்.

 இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பெருந்தலைவர்கள் ஏ.கே.கோபா லன், பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட் ராமன், உமாநாத், பாப்பா உமாநாத் இவர்கள் குடும்பத்தோடு நெருக்கமானவர். ஒன்றுபட்ட சேலம் மாவட்டமான சேலம், நாமக் கல், தரும்புரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது  போடப்பட்ட பொய் வழக்குகள், தொழிற்சங்க இயக்க போராட்டங்களில் ஈடுபட்டதால் போடப்பட்ட வழக்குகள் எதுவாக இருந்தா லும் எந்தவித பிரதிபலனின்றி வழக்குகளை நடத்தி வெற்றியை தேடித்தந்தவர்.

குறிப்பாக  1971-ல் சங்ககிரி சிமெண்ட் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தில் தோழர் கருணாகரன் உள்ளிட்ட 5 பேரை அரசின் துணையோடு பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கினை 19 ஆண்டுகள் நீதிமன்றத்தில் நடத்தி வெற்றிபெற்று அனைவரை யும் மீண்டும் பணியில் சேர்ந்ததில் இவரின் பங்கு மகத்தானது. இதேபோல், சேலம் இர யில்வே கூட்செட் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட கொலை வழக்கு, இரயில்வே கூட்செட் தொழிலாளர்கள் நூற்றுக்கணக் காணவர்களை தொழிற்சங்க போராட்டத்தை யொட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது தனது சொந்த ஜாமினில் எடுத்து வழக்கு நடத்தியது, பள்ளிப் பாளையம் பேப்பர்மில்லில் 1978ம் ஆண்டு  நடைபெற்ற பெருந்திரள் போராட் டத்தையொட்டி நூற்றுக்கணக்காண தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தது உள்ளிட்ட வழக்குகள் மீது திறம்பட பணியாற்றியது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக  உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பெற்று வந்த இவர் ஆக.16 ஆம் தேதி ஞாயிறன்று காலமானார்.  இவரின் மறைவு செய்திக்கு சிபிஎம்  மத்திய குழு உறுப்பினரும்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  டி.கே.ரங்கராஜன் மற்றும் சிபிஎம் மத்திய குழு உறுப்பினரும் சிஐடியு மாநில  தலைவருமான அ.சௌந்திரராஜன் ஆகி யோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இரங்கலை தெரிவித்தனர்.

 மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாட்டசெயலாளர் பி.ராமமூர்த்தி,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்க டபதி, எம்.சேதுமாதவன், மாவட்ட குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பொன்.ரமணி, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், அகில இந்த வழக்க றிஞர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் எம்.வெற்றிவேல், வழக்கறிஞர் கே.ஆர்.மாசிலா மணி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி  செலுத்தினர்.