சேலம், ஆக. 25- சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் இந் திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டனர். இப்போராட்டத்தின் விளைவாக முதற்கட்ட மாக சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் துவங்கினர். சேலம் மாநகரம் கிழக்கு, கருங் கல் பட்டி மற்றும் செல்லக்குட்டிகாடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுக ளாக பழுதடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து சாலையை காணவில்லை எனவும், அதனை கண்டுபிடித்து தரக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ யிடத்திற்கு வந்த அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் புதிய சாலை அமைத்து தருவதாகவும், தற்போது தற்காலி கமாக சாலையை சீரமைத்து தருவ தாகவும் உறுதியளித்தனர். இதனால் காத்திருப்பு போராட்டத்தை தற்காலி கமாக கைவிட்டனர். மேலும், சாலையை சீரமைக்கும் முதற்கட்டப் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர். முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு மாநகரச் செயலாளர் பி.ரமணி, வாலிபர் சங்க செயலாளர் பெரியசாமி, தலைவர் பிர பாகரன் மற்றும் முன்னணி ஊழியர் கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.