tamilnadu

img

வெங்காயத்தை ஆபரணமாக அணிந்து மனு அளிக்க வந்த இளைஞர்கள் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சேலம், டிச. 9-  வெங்காயத்தை ஆபரணமாக அணிந்து கொண்டு, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளிக்க வந்த இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளதால்,  வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மானிய விலையில் வெங்காயம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை  சேர்ந்த  இளைஞர்கள் வெங்காயத்தை மாலையாக தொடுத்து கழுத்தில் அணிந்து கொண்டும், மோதிரம்ம்,  கைச்சங்கிலி போன்று வெங்காயத்தை தங்க ஆபரணங்களாக அணிந்து கொண்டு நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.