சேலம், பிப்.9- சேலத்தில் சனியன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 2,217 வழக்குகளில் ரூ.38.62 கோடிக்கு சமரசத் தீா்வு எட்டப் பட்டது. சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மக்கள் நீதிமன்றம் சனியன்று நடைபெற்றது. முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் தலைமை தாங்கி தொடக்கி வைத் தார். நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் குணவதி வரவேற்றார். இந்த முகாமில், 5,929 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 2,217 வழக்குக ளில் ரூ.38.62 கோடிக்கு சமரசத் தீா்வு எட்டப்பட்டது.
சங்ககிரி
இதேபோல் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1, எண் 2 ஆகிய நான்கு நீதிமன்றங்கள், எடப்பாடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்களில் உள்ள 721 வழக்கு கள் சமரசத் தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டன. அதில் 278 வழக்குகள் ரூ.2 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 879 மதிப்பில் சமரசம் செய்து வைக்கப்பட்டன. மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.பாக்கியம், முதலாவது குற்றவி யல் நடுவா் நீதிமன்ற நீதிபதி டி.சுந்தரரா ஜன், சட்ட வட்டப் பணிகள் குழு உறுப்பி னா்கள் அடங்கிய ஐந்து தனி அமா்வுகளில் வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட் டன.