tamilnadu

img

பாலியல் வன்முறை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

  இளம்பிள்ளை, டிச. 1- பாலியல் வன்முறை குறித்து பள்ளி மாண வர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு மகுடஞ்சாவடி ஒன்றிய அரசு உயர்நிலை பள்ளி யில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் சனியன்று நடைபெற்றது.    சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்குட்பட்ட வளை யசெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்.பாலியல் வன்முறையை எதிர்ப்போம். குழந்தை தொழி லாளர்களை தடுப்போம்,போதை பொருட்களில் இருந்து அனைவரையும் காப்போம். பிளாஸ்டிக் பொருட்கள், டெங்குவை ஒழிப்போம்.  மழைநீர் சேகரிப்போம்.சாலை விதிகளை மதிப்போம். பாது காப்பான உலகத்தை படைப்போம் என்பது உள் ளிட்ட உறுதிமொழிகளை மாணவர்கள் ஏற்றனர்.  சேலம் முனைவர் கர்லின்-ஜென்னிஸ் குழுவினரின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வில் ஆசிரியர்கள், மாணவ, மாண விகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்வை பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் செய் திருந்தனர்.