tamilnadu

பரிசோதனைகளை குறைப்பது ஏன்?

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிக ரித்துக் கொண்டே செல்கிறது. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த  தொற்று எளிதாக பரவுவதால் நோயின்  தாக்கம் வேகமெடுத்துள்ளது. கொரோனா  அறிகுறி உள்ளவர்கள் தாமாகவே முன்  வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறி வித்துள்ளது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவ மனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கேகே நகர்  இஎஸ்ஐ மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில்  கொரோனா பரிசோதனை செயல்படு கின்றன. சென்னை புறநகர்ப்பகுதியான குரோம்பேட்டை தாலுகா மருத்துவமனை, மாநகராட்சி சுகாதார ஆய்வுக் கூடங்கள் மற்றும் தனியார் ஆய்வகங்களிலும் பரி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ கத்தில் 72 பரிசோதனை மையங்கள்  உள்ளன.

சென்னையில் அண்மை நாட்களாக தினசரி 600 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இத னால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே,  பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். காய்ச் சல், இருமல் போன்ற அறிகுறிகள் வந்தால் கூட பரிசோதித்துக் கொள்ள மருத்து வமனைகளுக்கு செல்கின்றனர். ஆனால் மருத்துவமனைகளில் சுவாசு பிரச்சனை இருந்தால் மட்டுமே பரிசோதிக்கின்றனர். சாதாரண காய்ச்சல், இருமல் இருந்தால் மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விடு கின்றனர். மேலும், வீட்டிலேயே 14 நாட்கள்  தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்து கின்றனர். சென்னையில் 12க்கும் மேற்பட்ட ஆய்வ கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சரி பாதி தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. பொதுமக்களை தனியார் மருத்துவமனைகளுக்கு உந்தி தள்ளும் வகையில் பரிசோதனை மறுக்கப்படுகிறோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழ கம் பரிசோதனைகளை அதிகரிக்க வலி யுறுத்தி வரும் நிலையில், சோதனை களை குறைப்பது ஏன்? எனவும் சமூக ஆர்வ லர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கொரோனா தொற்று கண்டறி யப்பட்ட ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த  அனைவரையும் பரிசோதிக்க மறுப்பதாக வும் புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு பகுதி யிலும் பொதுப்படையாக (ரேண்டம்) பரி சோதனைகளை மேற்கொண்டு நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து தீவிர  நடவடிக்களை மேற்கொள்வதன் மூலமே  தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்  என அரசியல் கட்சிகளும், நிபுணர்களும்  வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு  நேர்மாறாக அரசு செயல்படுகிறது.