ராணிப்பேட்டை, டிச. 7 – முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில், ராணிப்பேட்டையில் சனிக்கிழமை யன்று (டிச. 7) ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் 2023 - 24 ஆம் ஆண்டில், 510 குடும்ப நபர்களுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தார்.
இதில் போரில் ஊனமுற்ற முன்னாள் படை வீரர்களுக்கு தொகுப்பு நிதி கருணைத் தொகை 1 நபருக்கு ரூ.30 ஆயிரம், 2 நபர்களுக்கு கல்வி உதவித் தொகை தலா ரூ. 25 ஆயிரம் வீதம் என மொத்தமாக 3 நபர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கி னர். மேலும், 2020-ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சத்து 32 ஆயிரம் கொடி நாள் தொகையை வசூல் செய்த உதவி ஆணையர் (கலால்) சரஸ்வதிக்கு (ஓய்வு) தலைமைச் செயலாளர் பாராட்டு சான்று வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், துணை இயக்கு னர் முன்னாள் படைவீரர் நலன் லெப்டி னல் கர்னல். வேலு (ஓய்வு), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய ராகவன், வருவாய் கோட்டாட்சியர் ராஜ ராஜன், முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் சடையப்பன், வட்டாட்சி யர்கள் ஜெயக்குமார், ஜெயபிரகாஷ், அருள்செல்வம், நாயக் ஆதி நாராயண மூர்த்தி, முன்னாள் படை வீரர்கள் உடனிருந்தனர்.