ஆண்ட்ராய்டு கருவி பயனர்களுக்கு எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு கருவிகளில் தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இந்திய கணினி அவசர நிலைக் குழு (CERT-In) எச்சரிக்கை விடுத் துள்ளது.
இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்ச கத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசரநிலைக் குழு (CERT- In)’, Qualcomm, MediaTek உள்ளிட்ட பிராசஸர் களை (Processors) பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் 12, 12L, 13 மற்றும் 14-இல் செயல்படும் போன் மற்றும் டேப்லெட்களில் அதிக அளவில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த கரு விகளைப் பயன்படுத்தும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதாக எச்சரித் துள்ளது.
இது போன்று சைபர் தாக்குதல்களை குறைக்க வும், ஆண்ட்ராய்டு கருவிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் கணினி அவசர நிலைக்குழு (CERT-In) சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அதன்படி, பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு கருவிகள், கிடைக் கக்கூடிய சமீபத்திய மென்பொருள் பதிப்பில் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.
நம்பகத்தன்மை கொண்ட சோர்ஸில் இருந்து செயலி களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு கருவிகளில் ஆட்டோ அப்டேட்டை (Auto Update) ஆக்டிவேட் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.
விரைவில் வயர்லெஸ் இயர்பட்களில் ஜெமினி அசிஸ்டண்ட்!
கூகுள் நிறுவனம் விரைவில், வயர்லெஸ் இயர்பட்களில் ஜெமினி அசிஸ்டண்ட் (Gemini Assis tant) அம்சத்தை வழங்க உள்ளதாக 9to5 Google அறிக்கை வெளியிட்டு உள்ளது.
கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சாட்பா ட்டான ஜெமினி ஏஐ-யை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜெமினி ஏஐ சாட்பாட் வசதி, ஸ்மா ர்ட்போ ன்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொ டர்ச்சியாக விரைவில் வயர்லெஸ் இயர்பட்களில், ஜெமினி அசிஸ்டண்ட் (Gemini Assistant) அம்சத்தை வழங்க உள்ளதாக 9to5Google அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், இயர்பட்களில் ஜெ மினி அசிஸ்டண்ட் தொடர்பான அறி விப்பு, வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற உள்ள ‘மேட் பை கூகுள்’ நிகழ்வில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 20 புகைப்படங்கள் பதிவிடும் வசதி!
இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஒரே பதிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவி டும் வசதியை, கரோசல் (Carousel) பதிவு என்று அழைக்கப்படுகிறது. இந்த வசதி கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், அதிகபட்சமாக 10 புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் மட்டுமே முன்பு பதிவிட முடியும் என்று இருந்தது. அதேபோல், பதிவுகளு டன் பாடல்களை சேர்க்கும் வசதியும் இதில் இருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஒரே நேரத்தில் அதிகபட்ச மாக 20 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிட லாம் என்று இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ சேனலில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.