tamilnadu

img

விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் மறைவிற்கு சிபிஎம் இரங்கல்

விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு;

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தோழர் உஞ்சை அரசன் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் உஞ்சை அரசன் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு இடதுசாரி கட்சிகளுடன் நேசத்துடன் நெருங்கி பழகுபவர். அவரது மறைவு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், ஜனநாயக இயக்கங்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவனுக்கும், கட்சியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.