tamilnadu

வேலூர் மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

விஷம் குடித்து ஆய்வாளர் தற்கொலை முயற்சி

வேலூர், செப். 6- அரசியல் கட்சியினரு டன் ஏற்பட்ட மோதலில் பணியிடமாற்றம் செய்யப் பட்டதால் மனமுடைந்த காவல் ஆய்வாளர்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வேலூர் மாவட்டம் அரக் கோணத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாள ராக கனி (54) பணிபுரிந்து வந்தார். போக்குவரத்துக்கு இடையூ றாக இருந்த ஒரு கடையை  அகற்ற நடவடிக்கை எடுத்தது தொடர்பாக இவருக்கும் அரக்கோணத்தில் உள்ள அரசியல் கட்சியை சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்  பட்ட வாக்குவாதம் மோத லாக மாறியது. அதைத்தொடர்ந்து இந்த  சம்பவம் தொடர்பாக ஆய்வா ளர் கனி மீது காவல் உயர்  அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலூர் ஆயு தப்படைக்கு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்  யப்பட்டார். இந்த சம்ப வத்தில் அரக்கோணம் போக்குவரத்து பிரிவில்  பணியாற்றிய காவல்துறை யினர் அனைவரும் மாற்றப் பட்டனர். ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதால் ஆய்வா ளர் கனி மிகவும் விரக்தி அடைந்தார். தான் செய்யாத  தப்புக்கு தண்டனை அளித்த தாக சக அதிகாரிகளிடம் புலம்பி உள்ளார். மேலும் அவர் விடுமுறை கேட்டும் கிடைக்கவில்லை. அதனால்  மனமுடைந்து அவர் மருத்துவ விடுப்பில் சென்றார். இந்த நிலையில் ஆய்வாளர்  கனி வேலூரில் அவர் தங்கியிருந்த காவ லர் குடியிருப்பில் உள்ள  அறையில் விஷம் குடித்து  மயங்கி கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சககாவலர் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லஞ்ச ஒழிப்பு சோதனை:  ரூ. 1.28 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை, செப். 6- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனை நடத்தினர்.   அந்த சோதனையில் ஒரே நாளில் 95 ஏக்கர் நிலங்கள்  பத்திரப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், கணக்கில் வராத  ரூ 1.28 லட்சம் பணம் இருந்ததும் கண்டறியப்பட்டது.   அதைத் தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை யும், சில ஆவணங்களை யும் லஞ்ச ஒழிப்பு காவல்  துறையினர் எடுத்துச்சென்று, விசாரணை நடத்தி வரு கின்றனர்.

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய விழுப்புரம் மாநாடு வலியுறுத்தல்

விழுப்புரம், செப். 6- விழுப்புரத்தில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட மூன்றாவது மாநாடு மாவட்டத் தலை வர் ஆர்.தியாகராஜன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.கே.பார்த்தசாரதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். முன்னதாக விழுப்புரம் வட்டத் தலைவர்  எம்.குமாரதாஸ்  வரவேற்றார். மாநிலச் செய லாளர் தி.புருசோத்தமன் மாநாட்டை துவக்கி  வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் கு. அய்யாக்கண்ணு வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் வி.ரவீந்தி ரன் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். கூடுதல் கருவூல அலுவலர் கோ. சாவித்திரி, கடலூர் மாவட்டத் தலைவர் ஆர். மனோகரன், டிஎன்எஸ்டிசி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.  மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ படி ஆயிரம்  ரூபாய் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத்  தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன, பின்னர் மாவட்டத் தலைவர்க ளாக விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆர். பொன்முடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு  புலவர் அய்யா மோகன், மாவட்டச் செயலா ளர்களாக விழுப்புரம் மாவட்டத்திற்கு கு.  அய்யாகண்ணு, கள்ளகுறிச்சிக்கு எஸ்.கே. பார்த்தசாரதி,பொருளாளர்களாக விழுப்புரம்  மாவட்டத்திற்கு டி.ரத்தினம், கள்ளகுறிச்சிக்கு மு.பி.பாஸ்கரன் ஆகியோர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் புதிய  மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட னர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பி.ராமலிங்கம் நன்றி கூறினார்.