விஐடியில் பி.டெக் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்
வேலூர், மே 10-விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக்., பட்டப்படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் சேர்க்கை ஆணையை விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் வழங்கினார்.விஐடி வேலூர் வளாகத்தில் பி.டெக்., கணினி அறிவியல், மெக்கானிக்கல், சிவில், பயோ டெக்னாலேஜி, பயோ மெடிக்கல் உட்பட 18 படிப்புகளும், விஐடி சென்னை வளாகத்தில் கணினி அறிவியல், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற படிப்புகளும், விஐடி ஆந்திர வளாகத்தில் சி.எஸ்.இ, நெட்ஒர்க்கிங் அண்ட் செக்யூரிட்டி, டேட்டா அனாலிடிக்ஸ், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், வி.எல்.எஸ்.ஐ, எம்பெட்டட் சிஸ்டம்ஸ், மெக்கானிக்கல், விஐடி போபாலில் கணினி அறிவியல், கேமிங் டெக்னாலஜி, சைபர் செக்யூரிட்டி அண்ட் டிஜிட்டல் போரன்சிஸ் உள்ளிட்ட படிப்புகளும் உள்ளன. இந்தப் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 163 மையங்களிலும் நடத்தப்பட்டன. இந்த நுழைவுத்தேர்வில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 462 பேர் பங்கேற்றனர்.நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பி.டெக்., பட்டப்படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தரவரிசை அடிப் படையில் விஐடி வேலூர், சென்னை, போபால், அமராவதி வளாகங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியது. 1 முதல் 10 ஆயிரம் வரை தரவரிசை பெற்றவர்களுக்கு கலந் தாய்வு நடைபெற்றது.விஐடி வேலூர் வளாகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சஜல்புன்திர் என்பவருக்கு முதல் சேர்க்கை ஆணையை வழங்கினார். தொடர்ந்து, 30,001 முதல் 50,000 வரை தரவரிசை பெற்றவர்களுக்கு சனிக்கிழமையும், 50001 முதல் 70,000 வரை தரவரிசை பெற்றவர்களுக்கு திங்கட்கிழமையும், 70,001 முதல் 90,000 வரை தரவரிசை பெற்றவர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் 90,001 முதல் 1,10,000 வரை தரவரிசை பெற்றவர்களுக்கு புதன்கிழமையும் கலந்தாய்வு நடைபெறுகிறது.இதில் விஐடி நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்ட்டரெட்டி, துணை வேந்தர் ஆனந்த் ஆ.சாமுவேல், இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், சேர்க்கை இயக்குநர் கே.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவஞ்சலி கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
மதுரை, மே 10 - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நிபந்தனையுடன் அஞ்சலி கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ல் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கல்லூரி மாணவி உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் தூத்துக் குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22-ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவுசெய்து, தூத் துக்குடி சிதம்பர நகர் விவிடி சந்திப்பு அல்லது எஸ்விஏ பள்ளி மைதானம் அல்லது தூத்துக்குடி நகரில் எதாவது ஒரு மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் ஏப்ரல் 26-ல் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மே 22-ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கின் மீதான விசாரணை வியாழனன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு முன்பு நடைபெற்றது.மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், மே 22ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மனுதாரர் தரப்பில், தனியார் ஓட்டல் ஒன்றில் அமைதியான முறையிலேயே நடத்தப் பட தற்போது திட்டமிடப் பட்டுள்ளது. ஆகவே அனுமதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள், நினைவஞ்சலி கூட் டத்தை மே 22 ஆம் தேதி பெல் ஓட்டலில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடத்த அனுமதி வழங்கினர். அதோடு, 250 பேர் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும், நிகழ்வு முழுவதையும் மனுதாரர் மற்றும் காவல்துறை ஆகிய இரு தரப்பும் வீடியோ பதிவு செய்ய வேண்டும், நிகழ்வில் கலந்து கொள்வோரின் பட்டியலை நிகழ்வு முடிந்த பின்னர் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் வழங்க வேண்டுமென்ற நிபந் தனைகளுடன் அனுமதி வழங்கினர்.