tamilnadu

img

பாரிவாக்கம் ஏரியில் கோழிக் கழிவுகளை கொட்டிய வாகனம் பறிமுதல்

பாரிவாக்கம் ஏரியில் கோழிக் கழிவுகளை  கொட்டிய வாகனம் பறிமுதல்

அம்பத்தூர், ஜூன்22 - பூந்தமல்லி. அருகே உள்ள பாரிவாக்கம் ஊராட்சி ஏரியில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இதனால் ஏரி நீர் மாச டைந்து வருவதாகவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிற்கு ஏராளமான புகார்கள்  சென்றன. இதையடுத்து புகாரின் மீது உடனடி நட வடிக்கை எடுக்க திட்ட  இயக்குனர் உத்தரவிட்டார்.  அதன்பேரில் பூந்த மல்லி ஊராட்சி ஒன்றிய ஆணையர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்பாபு , ஊராட்சி செயலர் சாந்தகுமார் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாரி வாக்கம் - மேட்டுப்பாளையம் ஒன்றிய சாலையில் உள்ள ஏரியில் ஒரு வாகனம், கோழிக் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்தது. உடனே அதிகாரிகள் அந்த வாகனத்தை மடக்கி பிடித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர். மேலும் இங்கே குப்பை கள் கொட்டினால் நட வடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைத்தனர். இதுபற்றி பூந்தமல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வேனை பறிமுதல் செய்தனர்.