தமிழகத்தில் தடையை மீறி வேல் யாத்திரை சென்ற முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு வேல் யாத்திரை செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று நேற்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை தனது இல்லத்தில் இருந்து பாஜக தலைவர் எல். முருகன் திருத்தணிக்கு சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் தடையை மீறி வேல்யாத்திரை செல்ல முயன்றார்.
இந்நிலையில் திருத்தணியில் தடையை மீறி தொடங்கிய பாஜகவின் வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேல் யாத்திரையை தொடங்கிய மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளையும் கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர்.