சென்னை, ஜூன் 1- பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அர சின் இனப்படுகொலைப் போரை உடனே நிறுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறு (ஜூன் 2) அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பாலஸ்தீனத்தின் சின்னஞ்சிறு பகுதி யான காசாவில் இஸ்ரேல் ராணுவம் 2023 அக்டோபர் 7 அன்று துவங்கி தற்போது வரை இனப்படுகொலையை அரங்கேற்றி வரு கிறது. மருத்துவமனைகள், உணவுக் கூடங் கள், பள்ளிக்கூடங்கள் என்று கூட பாராமல் தாக்குதல் நடத்தி, இதுவரை 36 ஆயிரம் பேரை, இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. இவர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் பெண் கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொது மக்கள்.
இவ்வாறு மனிதகுலம் வெட்கித் தலை குனியும்படியான ஒரு கொடூரமான தாக்கு தலைக் கட்டவிழ்த்து விட்டுள்ள இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், ரபாவின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், மோடி அரசு இஸ் ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிறன்று நடத்துகிறது.